Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டு சிறை.. இதுவரை மொத்தம் 33 ஆண்டுகள்.. பழிவாங்கும் மியான்மர் ராணுவம்

Subscribe to Oneindia Tamil

நய்பிடா: மியான்மர் நாட்டு தலைவர் ஆங் சான் சூகிக்கு 3 ஊழல் வழக்குகளில் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அவருக்கு 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஐ.நா. சபை இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு, ஆங் சான் சூகியை விடுவிக்குமாறும் அறிவுறுத்தியும் மியான்மர் ராணுவம் அதை கண்டுகொள்ளவில்லை.

ஆங் சான் சூகிக்கு எதிராக மியான்மர் ராணுவம் பதிவு செய்த பல வழக்குகள் இன்னும் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மக்களாட்சியை கவிழ்த்த ராணுவம்

மக்களாட்சியை கவிழ்த்த ராணுவம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகள் போராடியவர் ஆங் சான் சூகி (76). இதற்காக, அமைதிக்கான நோபல் பரிசும் இவருக்கு கிடைத்துள்ளது. இதனிடையே, கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில், ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்தது. நீண்ட வருடங்களுக்கு பிறகு மியான்மரில் மக்களாட்சி மலர்ந்ததை மியான்மர் மக்கள் கொண்டாடி தீர்த்தனர். ஆனால், தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு ராணுவம் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியது. இதன் தொடர்ச்சியாக, ஆங் சான் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

அடுக்கடுக்கான வழக்கு

அடுக்கடுக்கான வழக்கு

ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியைத் தூண்டுதல், கரோனா விதிகளை மீறியது, அலுவல் ரீதியான சட்டங்களை மீறுதல், தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டது, பல ஊழல் வழக்குகள் என ஆங் சான் சூகி மீது 11 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டன. இதுதொடர்பான விசாரணை, மியான்மர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியை தூண்டியது, கரோனா விதிகளை மீறியது ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளில் ஆங் சான் சூகிக்கு தொடர்ச்சியாக சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டன. அதன்படி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை அவருக்கு 26 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

ஹெலிகாப்டர் வாடகை வழக்கு

ஹெலிகாப்டர் வாடகை வழக்கு

இந்நிலையில், ஆங் சான் சூகி பதவியில் இருந்த போது, அமைச்சர் ஒருவருக்கு ஹெலிகாப்டரை வாடகைக்கு கொடுத்ததில் அரசாங்க விதிகள் மீறப்பட்டிருப்பதாக கூறி அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், ஆங் சான் சூகிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக கூறி அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டனர்.

33 ஆண்டுகள் சிறை

33 ஆண்டுகள் சிறை

இந்த 7 ஆண்டுகளுடன் சேர்த்து ஆங் சான் சூகிக்கு மொத்தம் 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைத்திருக்கிறது. இந்த 33 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அவர் வீட்டுக்காவலிலேயே கழிக்கலாம் என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆங் சான் சூகிக்கு எதிராக மியான்மர் ராணுவம் எடுத்து வரும் இந்த நடவடிக்கைகளை பல்வேறு உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் கண்டித்துள்ளன. மேலும், ஐநா சபை கூட கடந்த வாரம் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு, ஆங் சான் சூகியை விடுவிக்க வேண்டும் என மியான்மர் ராணுவத்தை அறிவுறுத்தியது. ஆனால், ஐநா அறிவுறுத்தலை அந்நாட்டு ராணுவம் கண்டுகொள்ளவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+