மியான்மர் நாடாளுமன்றத்தில் ஒரு முஸ்லிம் எம்.பி. கூட இல்லை....
யாங்கூன்: மியான்மர் நாட்டு நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் சிறுபான்மையினராகிய முஸ்லிம்கள் ஒருவர் கூட எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. இருப்பினும் தேசிய லீக் கட்சித் தலைவர் ஆங்சான் சூயிதான் தங்களது நம்பிக்கைக்குரிய தலைவராக கருதுகின்றனர் முஸ்லிம்கள்.
மியான்மரில் சிறுபான்மை ரோகிங்கியா முஸ்லிம்களின் இஸ்லாம் மதம், பெரும்பான்மை புத்த மதத்துக்கு பெரும் அச்சுறுத்தல் என பேரினவாத அமைப்புகள் பிரசாரம் செய்தனர். இதன் விளைவாக முஸ்லிம்கள் கொடூரமாக தாக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்டனர்.

இந்நிலையில் அந்நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்றத்தில் மொத்தம் 6,074 வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக போட்டியிட்டனர். இவர்களில் 5,130 பேர் புத்த மதத்தினர்; 903 பேர் கிறிஸ்தவ மதத்தினர். ஆனால் 28 பேர் அதாவது 0.5% வேட்பாளர்கள் முஸ்லிம்கள்.
அதுவும் ஆளும் கட்சியாக இருந்த யு.எஸ்.டி.பி. எந்த ஒரு முஸ்லிம் வேட்பாளரையும் நிறுத்தவில்லை. ஆங்சான் சூயின் தேசிய லீக் கட்சியும், பேரினவாத இயக்கங்களுக்கு அஞ்சி முஸ்லிம்களை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என கேட்டுக் கொண்டது.
தேர்தலில் ஆங்சான் சூயின் தேசிய லீக் 390, யு.எஸ்.டி.பி. 41 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. கடந்த 2010, 2012ஆம் ஆண்டு இடைத்தேர்தல்களில் ரோகிங்கியா முஸ்லிம்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை.
இருப்பினும் முஸ்லிம்களின் நம்பிக்கைக்குரிய தலைவராக ஆங்சான் சூயிதான் இருந்து வருகிறார்.. அதுவும் அவரது கட்சியின் சார்பில் முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்படாத போதும் அவரே நம்பிக்கைக்குரியவராக கருதுகிறார் மியான்மர் முஸ்லிம்கள்....
நம்பிக்கையை நிறைவேற்றுவாரா ஆங்சான் சூயி?












Click it and Unblock the Notifications