நாகசாகியை அமெரிக்க அணுகுண்டு நாசமாக்கிய தினம்... இன்று

Subscribe to Oneindia Tamil

நாகசாகி: ஜப்பானின் நாகசாகி நகரை அமெரிக்காவின் அணுகுண்டு நிர்மூலமாக்கியதன் 70வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி நாகசாகி நகரில் இன்று நினைவஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. ஜப்பானின் தெற்கில் நாகசாகி உள்ளது. இந்த கொடூரத் தாக்குதலில் உயிர் பிழைத்தோர், 75 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நாகசாகி அமைதிப் பூங்காவில் இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

Nagasaki marks 70th anniversary of atomic bombing

சரியாக 11.02 மணிக்கு ஒரு நிமிடம் அனைவரும் மெளன அஞ்சலி செலுத்தினர். அந்த நேரத்தில்தான் நாகசாகி நகர் மீது அமெரிக்கா அணுகுண்டைப் போட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

2ம் உலகப் போரின்போது இதே மாதத்தில்தான 2 முறை ஜப்பானை அழித்தது அமெரிக்கா தனது அணுகுண்டுகளால். ஆகஸ்ட் 6ம் தேதி ஹிரோஷமிமா நகர் மீது அணுகுண்டைப் போட்டது. அதில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நாகசாகி நகரில் வீசப்பட்ட அணுகுண்டுக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் பலியானார்கள்.

இந்த அணுகுண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து ஜப்பான் சரணடைந்தது. உலகப் போரும் முடிவுக்கு வந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+