பின்லேடன் வெளியுலகில் பிரபலமாக காரணமாக அமைந்த நைரோபி... ஒரு பிளாஷ்பேக்!
நைரோபி: கென்யாவின் தலைநகர் நைரோபியில் தீவிராதிகள் மால் ஒன்றை முற்றுகையிட்டு நடத்தி வரும் தாக்குதல் பழைய நினைவுகளை கிளறி விட்டுள்ளது. அதாவது இதேபோன்ற ஒரு தாக்குதலுக்குப் பின்னர்தான் அல் கொய்தாவை நிறுவியவரான ஒசாமா பின்லேடன் சர்வதேச அளவில் மிகவும் தேடப்படும் தீவிரவாதியாக அமெரிக்காவில் அறிவிக்கப்பட்டான்.
நைரோபி தாக்குதலுக்குப் பின்னர்தான் பின்லேடனின் முகம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பானதாக உருவெடுத்தது.
1998ல் நடந்த இந்த தாக்குதலுக்குப் பின்னர்தான் பின்லேடனை நம்பர் ஒன் தீவிரவாதியாக அமெரிக்காவும் அறிவித்து அவனைத் தீவிரமாக தேடத் தொடங்கியது.

அமெரிக்க தூதரக தாக்குதல்
1998ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி தான்சானியாவின் தார் எஸ் சலாம், கென்யாவின் நைரோபி ஆகிய நகரங்களில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் அடுத்தடுத்து தொடர் குண்டுவெடிப்பு நடந்தது.

சவூதிக்கு அமெரிக்க படைகள் வந்ததை எதிர்த்து
சவூதி அரேபியாவுக்கு அமரிக்கப் படையினர் வந்ததன் 8வது ஆண்டையொட்டி இந்த தாக்குதலை அல் கொய்தா தீவிரவாதிகள் நடத்தினர்.

அத்தனை பேரும் ஒருங்கிணைந்து
இந்தத் தாக்குதலை பின்லேடன், அய்மான் அல் ஜவாஹிரி, எகிப்து இஸ்லாமிய ஜிஹாத், உள்ளிட்டவை முதல் முறையாக கரம் கோர்த்து நடத்திய முதல் தாக்குதல் இது.

அமெரிக்கா அரண்டது
பின்லேடன் மிகப் பெரிய மிரட்டலாக உருவெடுத்ததும் இந்தத் தாக்குதலுக்குப் பின்னர்தான். இந்த தாக்குதலுக்குப் பிறகுதான் பின்லேடனை மிகவும் அபாயகரமான தீவிரவாதி என்று அமெரிக்கா அறிவித்தது.
அப்படிப்பட்ட நைரோபியில்தான் தற்போது இன்னொரு பயங்கர தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications