எபோலாவை பரப்புவதாக கூறி, நாயுடன் உறவு வைத்த நபர் மடக்கிப்பிடிப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவின் வாட்டர்பரி நகரை சேர்ந்த பெண் அலைஸ் உட்ரஃப். சம்பவத்தன்று காலை 10 மணியளவில் இவரது வீட்டு நாய் வழக்கத்திற்கு மாறாக சத்தம் எழுப்பியுள்ளது. நாய்க்கு என்ன நேர்ந்தது என்பதை பார்க்க வெளியே வந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அங்கு அலைஸ் வீட்டு நாயிடம் நிர்வாணமாக காணப்பட்ட ஒரு இளைஞர் பாலுறவு செய்து கொண்டிருந்தார். கோபமடைந்த அலைஸ், படுக்கையறைக்கு ஓடிச் சென்று, தனது கைத் துப்பாக்கியை எடுத்து வந்து இளைஞரை நோக்கி காண்பித்து நாயை விட்டுவிடுமாறு கூறி கத்தினார்.
ஆனால் இதைக் கேட்காமல் நாயை விட்டுவிட்டு, அலைசை நோக்கி நெருங்கி வரத்தொடங்கினார் அந்த வாலிபர். இதையடுத்து, கைத் துப்பாக்கியால் தரையை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டார் அலைஸ். இதனால் அங்கேயே அந்த வாலிபர் நின்றார். இதனிடையே அண்டை வீட்டார் அளித்த தகவலின்பேரில் விரைந்து வந்த போலீசார், வாலிபரை கைது செய்ய முயன்றனர்.
ஆனால் வாலிபர் தப்பியோடத் தொடங்கினார். சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று போலீசார் அவரை கைது செய்தனர். அந்த நபர், நாய்க்கு எபோலாவை பரப்பப்போகிறேன்... உலகை அழிக்கப்போகிறேன்... என்று மீண்டும் மீண்டும் சத்தம் போட்டுக் கொண்டே இருந்துள்ளார். இதனால் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்க கூடும் என்ற சந்தேகத்தில் மனநல மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில், துப்பாக்கி சூடு நடத்தியதற்காக அலைஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று போலீசார் உறுதியளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications