செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவதில் இவ்வளவு சிக்கலா! கொஞ்சம் ரிஸ்க்தான்
வாஷிங்டன்: விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதே ஒரு காலத்தில் பெரிய விஷயமாக இருந்தது. ஆனால் இன்று விண்வெளிக்கு டூர் வந்துவிட்டது. இந்நிலையில் செவ்வாய்க்கு மனிதனை அனுப்ப விஞ்ஞானிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
இந்த திட்டத்தில் பெரிய பிரச்சனைகள் இருக்கின்றன. பார்க்க பூமி போன்றே இருந்தாலும் செவ்வாய் கிரகம் ஓர் இறந்து போன பூமி. இந்நிலையில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் உள்ள பிரச்சனைகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

1. நீண்ட தூர பயணம்
2. வெப்பக் கதிர்கள்
3. இருதய & எலும்பு பிரச்சினைகள்
4. உளவியல் பிரச்சினைகள்
5. குழுவினரிடையே மோதல்கள்
இந்த 5 பிரச்சனைகள் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்புவதில் இருக்கிறது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். முதல் விஷயத்தை பொறுத்தவரை பூமிக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் இடையே 22.5 கோடி கி.மீ தொலைவு இருக்கிறது. பூமியிலிருந்து நிலவுக்கு செல்ல வெறும் 3 நாட்கள் போதும். ஆனால் செவ்வாய் கிரகத்திற்கு சென்று சேர 3 ஆண்டுகள் வரை ஆகும். மட்டுமல்லாது பூமியிலிருந்து நாம் ஏதாவது சிக்னல் அனுப்பினால் அது செவ்வாய் கிரகத்திற்கு போய் சேர 20 நிமிடங்கள் வரை ஆகலாம்.
செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் விண்வெளி வீரர்கள், அவர்கள் கொண்டு சென்ற உபகரணங்கள் பழுதாகினால் அல்லது மருத்துவ அவசரநிலை ஏற்பட்டால், நிலைமை மோசமாகலாம். பூமியில் இருந்து உடனடி உதவி கிடைக்காது என்பதால் வீரர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நிலை இருக்கும்.
பூமியில் காந்தவலயம் இருப்பதால் நம்மை நோக்கி வரும் புறஊதா கதிர்கள், இதர பல ஆபத்தான சூரிய கதிர்கள் வடிகட்டப்பட்டுவிடுகிறது. செவ்வாயில் அப்படி கிடையாது. எனவே புற்றுநோய் அபாயம், நரம்பு பாதிப்பு, இதய நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
செவ்வாய்க்கு போகும் பயணம் மிக நீண்டது. இந்த பயணத்தில் ஈர்ப்பு விசை இருக்காது. இதனால் உடலில் உள்ள திரவங்கள் தலையை நோக்கி செல்கின்றன. இது முகம் வீங்குதல் மற்றும் கண்பார்வை பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஈர்ப்பு விசை இல்லாததால் எலும்பு மற்றும் தசைகள் பலவீனமடைந்து, மெதுவாக செயலிழக்க வாய்ப்பு இருக்கிறது. செவ்வாய் கிரகத்திற்கு சென்று திரும்புவோரின் இரத்த அழுத்தம் சரியாக கட்டுப்படுத்த முடியாது. சமநிலை & இயக்கக் கணிப்புத் திறனும் (Balance & Coordination) பாதிக்கப்படும்.
செவ்வாய் ரொம்ப தூரத்தில் இருப்பதால் நீண்டகால தனிமையை அனுபவிக்க வேண்டும். குறைந்தபட்சம் 10 வருடங்களாவது தனியாக இருக்க வேண்டும். இது மன அழுத்தம், மனநிலை பாதிப்பு, நினைவாற்றல் குறைவு, மனச்சோர்வு, தூக்க கோளாறுகள் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தும்.
மட்டுமல்லாது இந்த பயணத்தின்போது ஒரே குழுவுடன் நீண்ட ஆண்டுகளுக்கு வீரர்கள் இருக்க வேண்டும். இதனால் சண்டை சச்சரவுகள் ஏற்படும். ஆக மனிதர்களை செவ்வாய்க்கு அனுப்பும் திட்டம் விஞ்ஞான மற்றும் மருத்துவ சவால்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications