பாக்-ல் நள்ளிரவில் திடீர் மின் தடை- நகரங்கள் இருளில் மூழ்கின..ஆட்சி கவிழ்ப்பா? என பரபர ட்வீட்டுகள்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நள்ளிரவில் திடீர் என ஏற்பட்ட மின்தடையால் அந்நாட்டின் முக்கிய நகரங்கள் விடிய விடிய இருளில் மூழ்கின. தொழில்நுட்ப கோளாறுகள் மட்டுமே இந்த மிகப் பெரிய திடீர் மின்தடைக்குக் காரணம் என்று பாகிஸ்தான் அரசு விளக்கம் அளித்துள்ளது.

பாகிஸ்தானில் சனிக்கிழமை நள்ளிரவில் திடீரென மிகப் பெரிய மின்தடை ஏற்பட்டது. இதனால் பாகிஸ்தானின் முக்கிய நகரங்களான இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி, லாகூர் உள்ளிட்டவை இருளில் மூழ்கின.

மின்தடை தொடர்பாக அந்த நாட்டு எரிசக்தித் துறை அமைச்சர் ஒமர் ஆயுப் இடைவிடாமல் ட்விட்டரில் ஞாயிற்றுக்கிழமை விடிய விடிய அப்டேட்டுகளை செய்து வந்தார். மேலும் நாட்டின் தேசியமின்விநியோக அமைப்பில் அதிர்வெண் திடீரென ஜீரோவுக்கு சென்றுதான் மின்தடைக்குக் காரணம்; தொழில்நுட்ப கோளாறு மட்டுமே மின்தடைக்குக் காரணம் எனவும் அவர் விளக்கம் அளித்து கொண்டே இருந்தார்.

இந்த மின்தடை சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கானது. பாகிஸ்தானில் 1999-ம் ஆண்டு நவாஸ் ஷெரீப் பிரதமராக இருந்த போது மிகப் பெரிய மின்தடை ஏற்பட்டது. அப்போது பர்வேஷ் முசாரப் ராணுவப் புரட்சியில் ஈடுபட்டு ராணுவ ஆட்சியை அந்நாட்டில் அமல்படுத்தி இருந்தார். இதனை குறிப்பிட்டு பாகிஸ்தானியர்கள் ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர்.

மின்தடை நீங்கும்போது தற்போதைய பிரதமர் இம்ரான்கான் பதவியில் இருப்பாரா? என பாகிஸ்தானியர்கள் பலரும் கேள்வி எழுப்பி பதிவிட்டிருந்தனர். பாகிஸ்தான் மின்தடை குறித்த ட்விட்டர் பதிவுகள் இந்தியா, பாகிஸ்தானில் டிரெண்டிங்கானது.

அதிகாலை 4.19 மணியளவில் பாகிஸ்தான் எரிசக்தித்துறை அமைச்சர் ஒமர் ஆயுப், நகரங்களில் மின்விநியோகம் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications