For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாலிபான்களின் வெறிக்கு பலியான பள்ளிக் குழந்தைகளுக்கு இழப்பீடு – நவாஸ் ஷெரீப் அறிவிப்பு

Google Oneindia Tamil News

பெஷாவர்: பாகிஸ்தான் பெஷாவர் நகரில் தாலிபான் தாக்குதலில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் பள்ளிக்குள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 141 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 85 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலுக்கு தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

Nawas sheriff announce compensation for Peshawar children…

பெஷாவர் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் நாவாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்த விசாரணையை தானே முன்னின்று விசாரிக்க உள்ளதாக நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார். மேலும் அவர்கள் என் குழந்தைகள், அவர்களின் மரணம் என்னுடைய இழப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கு ரூபாய் 5 லட்சமும், படுகாயமடைந்த மாணவர்களுக்கு ரூபாய் 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

English summary
Nawas sheriff announced compensation for the children who died in Taliban attack, Peshawar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X