இந்தியா சுட்டுக் கொன்ற தீவிரவாதி புர்கான் வானிக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அஞ்சலி
காஷ்மீரில் கடந்த ஆண்டு ஜூலை 8ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த புர்கான் வானிக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இஸ்லாமாபாத்: இந்திய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தளபதி புர்கான் வானியின் முதலாமாண்டு நினைவு தினத்தன்று இஸ்லாமாபத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப் புர்கான் புகைப்படத்துக்கு அஞலி செலுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தளபதி புர்கான் வானி கடந்த ஆண்டு ஜூலை 8ஆம் தேதி பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதனால் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் பெரும் கலவரம் வெடித்தது. புர்கான் வானியின் இறுதி ஊர்வலத்தில் பல ஆயிரம் மக்கள் கலந்துகொண்டனர்.

புர்கான் வானி, ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் கொள்கைகளை இணையத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். இதனால் அவரை காஷ்மீர் இளைஞர்கள், மாணவர்கள் அவரை தலைவராக ஏற்றுக்கொண்டனர்.
ஜூலை 8, 2016 அன்று அவர் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு எழுந்த கலவரத்தில் ஆயிரக்காணக்கான இளைஞர்கள் சாலைக்கு வந்து பாதுகாப்புப் படையினருடன் மோதினர். அப்போது அவர்களை ஒடுக்க பெல்லட் குண்டுகள் பயன்படுத்தியதில் பலரது கண்கள், கழுத்துகளில் குண்டு பட்டு காயமடைந்தனர். பிறகு உச்சநீதிமன்றமே மத்திய அரசிடம் பெல்லட் குண்டுகளை பயன்படுத்த வேண்டாம் என கூறியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த ஆண்டு ஜூலை 8ஆம் தேதி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் புர்கான் வானியின் முதல் நினைவு தினத்தையொட்டி அவரது படத்துக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் ராணுவ தளபதி பாஜ்வாவும் புர்கான் படத்துக்கு அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications