பீதியில் இரவெல்லாம் பிரார்த்தனை செய்து தெருவில் பொழுதை கழித்த நேபாள மக்கள்
காத்மாண்டு: நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து அங்குள்ள மக்கள் நேற்று இரவு தூங்காமல் தெருக்களில் வந்து பிரார்த்தனை செய்தும், பாடல்கள் பாடியும் பொழுதை கழித்துள்ளனர்.
நேபாளத்தில் சனிக்கிழமை காலை 11.56 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1, 896 ஆக அதிகரித்துள்ளது. நிலநடுக்கத்தால் நேபாளத்தில் உள்ள ஏராளமான கட்டிடங்கள், பிரபலமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம் ஆகியுள்ளன.

நிலநடுக்கத்தை அடுத்து ஆப்டர்ஷாக் எனப்படும் நில அதிர்வு ஏற்படும் என்று அஞ்சிய நேபாள மக்கள் சனிக்கிழமை இரவை தெருக்களில் கழித்துள்ளனர். மக்கள் இரவு முழுவதும் பிரார்த்தனை செய்து கொண்டும், பாடல்கள் பாடிக் கொண்டும் இருந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை நேபாளத்தில் ஆப்டர்ஷாக் நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியிருந்தது. பல்வேறு இடங்களில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் வெறுங்கையால் இடிபாடுகளை அகற்றி வருகின்றனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 80 ஆண்டுகளில் நேபாளத்தில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications