நிலநடுக்கத்தால் நேபாளத்தில் 10 லட்சம் குழந்தைகள் பாதிப்பு: ஐ.நா. கவலை
காத்மாண்டு: நிலநடுக்கத்தால் நிலைகுலைந்துள்ள நேபாளத்தில் சுமார் 10 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் தலைநகர் காத்மாண்டு நிலைகுலைந்து போயுள்ளது. அங்கு மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

குழந்தைகள்
நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 10 லட்சம் குழந்தைகள் சிக்கியுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் அவசர நிதியம்(யுனிசெப்) தெரிவித்துள்ளது.

நோய்கள்
நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்துள்ளன. இடிபாடுகளை அகற்ற அகற்ற பிணங்களாக வருகிறது. இன்னும் மீட்கப்படாமல் பல உடல்கள் உள்ளன. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

குடிநீர்
பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போதிய உணவு, நீர் இல்லாமல் உள்ளது. இந்நிலையில் குழந்தைகளுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்குமா என்பது தான் எங்களின் பெரிய கவலை என யுனிசெப் தெரிவித்துள்ளது.

தட்டம்மை
நேபாளத்தில் ஆங்காங்கே கிடக்கும் பிணக் குவியல்களால் பலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தட்டம்மை ஏற்படும் அபாயமும் உள்ளது என்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் அவசர நிதியம்.

சாலைகள்
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பல கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் மீட்பு குழுவினர் அந்த ஊர்களை அடைவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications