நேபாளத்தின் புதிய அதிபராக வித்யாதேவி பண்டாரி தேர்வு- முதல் பெண் அதிபர்!
காத்மண்டு: நேபாள நாட்டின் புதிய அதிபராக நேபாள கம்யூனிஸ்ட்- ஐக்கிய மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வித்யாதேவி பண்டாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டின் முதலாவது பெண் அதிபர் என்ற பெருமையை பெற்றுள்ளார் வித்யா பண்டாரி.
உலகின் ஒரே இந்துநாடு என்ற பெருமை கொண்டது நேபாளம். இங்கு 2008ஆம் ஆண்டுடன் மன்னராட்சி முடிவுக்கு வந்து மக்களாட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது.

2008ஆம் ஆண்டு ராம்பரத் யாதவ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் அண்மையில் நேபாளத்துக்கான புதிய அரசியல் சாசனம் பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்துநாடாக இருந்த போதும் 'மதச்சார்பற்ற' நாடு நேபாளம் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதிய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் பிரதமராக ஷர்மா ஒளி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து புதிய அரசியலமைப்பு சட்டத்தின் கீழான முதலாவது அதிபர் தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் நேபாளி காங்கிரஸ் கட்சியின் குல் பகதுார் குருங், நேபாள கம்யூனிஸ்ட்- ஐக்கிய மார்க்சிஸ்ட் கட்சியின் (சி.எபி.என். யுஎம்எல்) வித்யாதேவி பண்டாரி, நேபாள உழைப்பாளர் மற்றும் விவசாயிகள் கட்சி சார்பில் நாராயண் மகாஜன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் ஐக்கிய மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வித்யாதேவி பண்டாரி தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்றைய தேர்தலில் மொத்தம் உள்ள 597 எம்.எல்.ஏ, எம்.பிக்களில் 549 பேர் வாக்களித்தனர். இதில் வித்யாதேவி பண்டாரி 327 வாக்குகளைப் பெற்று அதிபராக தேர்வானர். அவருக்கு அடுத்த படியாகந் நேபாளி காங்கிரஸ் கட்சியின் குருங் 214 வாக்குகளைப் பெற்றார்.
இன்றைய தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் நாட்டின் முதல் பெண் அதிபராக வித்யாதேவி பண்டாரி நேபாள வரலாற்றில் அவர் இடம்பிடித்துள்ளார்.












Click it and Unblock the Notifications