சுற்றிலும் சூழ்ந்த பீரங்கிகள்! ரஷ்ய துப்புரவு பணியாளர் என்ன செய்தார் தெரியுமா.. உலகை உலுக்கிய காட்சி
மாஸ்கோ: ரஷ்யாவில் இப்போது உள்நாட்டுப் போர் ஏற்படும் ஒரு பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், அதைப் பற்றியும் கவலைப்படாமல் துப்புரவுத் தொழிலாளி தனது வேலையைச் செய்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
உக்ரைன் நாட்டில் கடந்த ஓராண்டிற்கும் மேலாக ரஷ்யா தொடர்ந்து போரிட்டு வருகிறது. இந்தப் போர் சில வாரங்களில் முடிந்துவிடும் என்றே முதலில் பலரும் நினைத்த நிலையில், இப்போது அது மாதக் கணக்கில் தொடர்கிறது.

சர்வதேச அளவில் மிகவும் வலிமையான ஒரு ராணுவமாக ரஷ்யா பார்க்கப்பட்டது. இதன் காரணமாகவே உக்ரைனால் ரஷ்யப் படைகளால் தாக்குப்பிடிக்க முடியாது என்று பலரும் கருதினர். இருப்பினும், போர் ஆரம்பித்த பிறகு நிலைமை தலைகீழானது.
உக்ரைன் போர்: தொடக்கத்தில் என்ன தான் ரஷ்யா பல நகரங்களைக் கைப்பற்றினாலும் கொஞ்ச நாட்களில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது. மீண்டும் ரஷ்யா வசம் இருந்து நகரங்கள் உக்ரைன் வசம் சென்றது. உக்ரைன் வீரர்கள் காட்டி உறுதியும், உலக நாடுகள் அவர்களுக்கு அளித்த ஆயுதங்களும் ரஷ்யாவை எதிர்த்து நிற்கப் பெரியளவில் உதவியது. இதனால் ரஷ்யா தனது தாக்குதல் யுக்திகளைக் கூட மாற்ற வேண்டி இருந்தது. இதனிடையே இப்போது ரஷ்யாவுக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது.

அதாவது ரஷ்யாவில் உள்ள தனியார் ராணுவம், கூலிப்படை என்றும் சொல்லலாம், வாக்னர் குழு ரஷ்ய ராணுவத்திற்கு எதிராகத் திரும்பியுள்ளது. தங்கள் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இதற்குப் பதில் சொல்லியே தீர வேண்டும் என்று அந்த அமைப்பின் தலைவர் பிரிகோஜின் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், உக்ரைன் போருக்கும் கூட ரஷ்யா பாதுகாப்புத் துறை அமைச்சரே காரணம் என்றும் பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
வாக்னர் குழு: எல்லையில் உள்ள நகரமான ரோஸ்டோவ் நகரில் வாக்னர் தனது ஆட்களை இறக்கியுள்ளனர். இதனால் அங்கே ஒருவித பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே அங்கே எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில், நகரம் முழுவதும் ராணுவத்தின் அதிநவீன பீரங்கிகள் செல்கிறது. முழுக்க ராணுவம் வீரர்கள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இருப்பினும், இந்த பரபரப்புக்கு மத்தியில் துப்புரவு ஊழியர் ஒருவர் எந்தவொரு சலனமும் இல்லாமல் தொடர்ந்து தெருவைச் சுத்தம் செய்து வருகிறார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. நகரத்தில் ராணுவமே இறங்கியுள்ள போதிலும், அதைத் துளியும் கண்டுகொள்ளாமல் துப்புரவு ஊழியர் அவர் தனது வேலையை சின்சியராக செய்து வருகிறார்.
— Russians With Attitude (@RWApodcast) June 24, 2023
வீடியோ: Osint technical என்ற ட்விட்டர் பயனாளி இந்த வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அவர் மேலும், ""ரோஸ்டோவில் தெருவைச் சுத்தம் செய்யும் துப்புரவுப் பணியாளர் என்ன நடந்தாலும் தனது பணியைத் தொடர்ந்து செய்து வருவதை நம்ப முடியவில்லை" என்று பதிவிட்டுள்ளார். இவர் பகிர்ந்த இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
சிலர் மியான்மாரில் ராணுவ கிளர்ச்சியாக நடந்த போது அங்கே ஜிம் பயிற்சியாளர் கிங் ஹ்னின் வை என்பவர் அத்தனை பரபரப்பிற்கு மத்தியில் நடுரோட்டில் வைத்து உடபயிற்சி வீடியோவை எடுத்து வெளியிட்டார். மியான்மரின் ராணுவம் ஆட்சியைக் கவிழ்க்க ராணுவ வாகனங்கள் பின்னால் அணி வகுத்துச் செல்லும் நிலையில், அதைக் கூட கண்டு கொள்ளாமல் அந்த பெண் மாஸ்க் அணிந்து ஒர்க்அவுட் செய்து கொண்டிருந்தார்.
இந்த வீடியோ அப்போது சர்வதேச அளவில் பெரும் பேசுபொருள் ஆனது. இப்போது அதேபோல ராணுவமே இறங்கியுள்ள போதிலும், இந்த துப்புரவுப் பணியாளர் தனது வேலையைக் கண்ணும் கருத்துமாகச் செய்து வருவதாகப் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications