ஒருவர் மரணம்.. மூவர் காயம்.. சுந்தர் பிச்சையை கலங்க வைத்த துப்பாக்கி சூடு.. வெளியாகும் புதிய உண்மை
யூ டியூப் தலைமையகத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்திற்கு கூகுள் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சை வருத்தம் தெரிவித்துள்ளார்.
Recommended Video

கலிபோர்னியா: நசீம் அஃதாம் என்ற பெண் யூ டியூப் தலைமையகத்தில் துப்பாக்கி சூடு நடத்தியதில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்திற்கு கூகுள் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சை வருத்தம் தெரிவித்துள்ளார்.
யூ டியூப் வீடியோக்கள் மூலம் வரும் வருமானம் குறைந்ததால் அமெரிக்காவை சேர்ந்த நசீம் அஃதாம் என்ற பெண் யூ டியூப் தலைமையகத்தில் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறார். பின் அந்த பெண் தன்னையே துப்பாக்கியால் சுட்டு மரணம் அடைந்து இருக்கிறார்கள்.
நேற்று மாலை கலிபோர்னியாவில் இருக்கும் யூ டியூப் நிறுவன தலைமையகத்தில் துப்பாக்கியுடன் புகுந்த இவர் சரமாரியாக சுட்டு உள்ளார். இதில் மூன்று பேர் காயமடைந்து இருக்கிறார்கள்.

காதலர் இருந்தார்
நசீம் நடத்திய துப்பாக்கி சூட்டில் இன்னொரு முக்கியமான தகவலும் வெளியாகி இருக்கிறது. இதில் மூன்று பேர் காயம் அடைந்து இருக்கிறார்கள். அதில் ஒருவர் மிகவும் மோசமான உடல்நிலையுடன் இருக்கிறார். அவர் நசீமின் முன்னாள் காதலர் என்று கூறப்படுகிறது. ஒருவேளை இந்த துப்பாக்கி சூடு இதன் காரணமாக நடந்து இருக்க வாய்ப்பு இருக்கலாம் என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.

புதிய சந்தேகம்
அதே சமயம் இந்த துப்பாக்கி சூடு வெறும் யூ டியூப் வீடியோக்களின் வருமான பிரச்சனையால் மட்டும் நடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு பின் வேறு ஒரு காரணம் இருக்கலாம் என்று போலீஸ் சந்தேகப்படுகிறது. நஸீம் இதற்கு முன் யூ டியூப் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு இருந்தார் என்று தகவல்கள் கசிந்து இருக்கிறது.
|
சுந்தர் பிச்சை கலக்கம்
இந்த துப்பாக்கி சூடு குறித்து கூகுள் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சை கருத்து தெரிவித்துள்ளார். அதில் ''இன்று நடந்து இருக்கும் மோசமான சம்பவத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. யூ டியூப் சிஇஓ சூசனும் நானும் இங்கு வேலை பார்க்கும் ஊழியர்களுக்கும், யூ டியூப் நிறுவனத்திற்கும் இந்த மோசமான நேரத்தில் உறுதுணையாக இருப்போம். உதவியாக இருந்த போலீஸ் உட்பட அனைவருக்கும் நன்றி'' என்றுள்ளார்.

உடனடி தடை
இந்த சம்பவம் காரணமாக அமெரிக்காவில் தற்போது துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிரான குரல் வலுத்து இருக்கிறது. டிவிட்டர் நிறுவனர் தொடங்கி எல்லோரும் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் வேண்டுமென்றே இதில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று இவர்கள் வெளிப்படையாக குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்கள்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications