”கிளக்கோமா” கண் நோய்க்கு புதிய ‘நானோ’ மருந்து கண்டுபிடிப்பு
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் கண்நோய் பாதுகாப்பு நிறுவனம் மற்றும் நயாங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து "கிளக்கோமா" எனப்படும் கண் நோய்க்கு புதிய "நானோ" மருந்து கண்டுபிடித்துள்ளனர்.
இதன்மூலம் கண்நோய்க்கு மிகச்சிறந்த தீர்வு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.மேலும், ஆறு மாதத்திற்கு ஒரு முறை மறுபடி செலுத்திக் கொண்டால் போதுமானதாகும்.இதன்மூலம் கண்களின் பார்வைத்திறன் எந்த பக்கவிளைவுகளுக்கும் உள்ளாகாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்து நுண்ணிய அளவிலான மில்லியன் கணக்கான மாத்திரகளைக் கொண்டிருக்கும்.இது கண்விழிக்குள் ஊசிமூலம் ஏற்றப்படும். இந்த நானோ மருந்து மெதுவாக ஆறு மாத காலத்துக்கு மருந்தை வெளியிடும்.
அதனால் தினமும் கண் சொட்டு மருந்தை விடவேண்டிய தில்லை. புதிய மருந்தைச் செலுத்தும் முறையில் கண் பகுதியை உணர்வு இழக்கச் செய்து, பின்னர் மேற்கொள்ளப்படும். இதுவரை ஆறு நோயாளிகளிடம் இந்த மருந்து பரிசோதிக்கப்பட்டுள்ளது.