நேபாளிகளுக்கு சாதகமான தொழிலாளர் நலன் ஒப்பந்தம்.. மலேசியாவுடன் கையெழுத்து!
கோலாலம்பூர்: மலேசியா, நேபாளம் இடையே புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது நேபாளத்திலிருந்து மலேசியாவுக்கு வேலை பார்க்க வரும் தொழிலாளர்களுக்கு பலன் தரும் வகையில் அமைதுயும்.
நேபாள நாட்டு தொழில்துறை அமைச்சர் கோகர்னா பிஸ்தா மற்றும் மலேசியாவின் மனித வளத்துறை அமைச்சர் குலசேகரன் தலைமையில் கையெழுத்தான இந்த புதிய ஒப்பந்தத்தின் கீழ், மலேசியாவுக்கு வேலைக்கு செல்லும் நேபாள தொழிலாளர்கள் எந்த கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை

விமானக் கட்டணம், விசா கட்டணம், மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட அத்தனைக்கும் ஒரு தொழிலாளியை வேலைக்கு அமர்த்தும் மலேசிய நிறுவனமே பொறுப்பெடுக்க வேண்டும். கூடுதலாக, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் தரையிறங்கும் தொழிலாளிகளை 6 மணிநேரத்துக்குள் தங்கள் இடத்துக்கு குறிப்பிட்ட நிறுவனம் அழைத்துச் செல்ல வேண்டும்.
அதே சமயம், ஒப்பந்த தொழிலின் கால எல்லை 3 ஆண்டிலிருந்து 2 ஆண்டுக்கு குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், தொழிலாளர்களின் மாத சம்பளத்தை 7ம் தேதிக்குள் நிறுவனம் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். போனஸ் மற்றும் அதிக நேரம் பணியாற்றுவதற்கான தொகை மலேசிய அரசு நிர்ணயித்துள்ள தொகையை காட்டிலும் குறைந்ததாக இருக்கக்கூடாது. தொழிலாளர்களின் உடல்நலன் மற்றும் பாதுகாப்பை வேலைக்கு அமர்த்தும் நிறுவனமே உறுதி செய்ய வேண்டும்.
முன்னதாக ஜூலை 2018ல், மலேசியா செல்லும் நேபாள தொழிலாளர்கள் மீது திணிக்கப்படும் தேவையற்ற நடைமுறைகள் மீது அதிருப்தி கொண்ட நேபாள அரசாங்கம் மலேசியாவுக்கு தொழிலாளர்கள் செல்வதற்கு அதிரடியாக தடை விதித்திருந்தது. தனியார் நிறுவனங்கள் வழியாக மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் இத்தடைக்கு காரணமாக கூறப்பட்டது.
நேபாளம், மலேசியாவுக்கு தொழிலாளர்களை அனுப்புவதில் முதன்மையான இடத்தைக் கொண்டிருக்கின்றது. இன்றைய நிலையில், மலேசியாவின் தோட்டத்தொழில், கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 5 லட்சம் நேபாள தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் காவல் காக்கும் பணியில் மட்டும் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் நேபாளிகள் வேலை செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
கடவுளே.. பும்ராவே.. வான்கடே மைதானத்தில் பிசிசிஐ சிலை வைக்கணும்.. தெறிக்கும் ரசிகர்களின் மீம்ஸ்! -
அவரு மட்டும் வரல.. அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்காரு! விஜய் செயலால் டென்ஷனான தவெகவினர்! -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
இனிமேல் சர்ச்சில் பேசாதப்பா.. விஜய் - திரிஷா செயலால்.. கோபம் அடைந்த உறவுகள்? பரபரப்பு போஸ்ட்!












Click it and Unblock the Notifications