நியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் குக்கர் குண்டுவெடிப்பு.. தேடப்பட்டு வந்தவர் கைது
நியூயார்க்: நியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் குப்பைகள் சேகரிப்பு தொட்டியில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துச் சிதறியதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆப்கன் வம்சாவளியை சேர்ந்த ஒருவரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மன்ஹாட்டனின் செல்சி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வெடித்தது நம்ம ஊரில் பயன்டுத்துவதைப் போன்ற நாட்டு வெடிகுண்டாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.

செல்சி பகுதியின் 23வது தெருவில் அமெரிக்காஸ் அவென்யூ மற்றும் 7வது அவென்யூ சந்திக்கும் இடத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் ஒரு குண்டு வெடித்தது. இன்னொரு இடத்தில் வெடிக்காத நிலையில் பிரஷர் குக்கருக்குள் வயர்கள் செருகப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த குண்டுவெடிப்பில் 29 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக ஆப்கன் வம்சாவளியை சேர்ந்த ஒருவரை அந்நாட்டு போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
அகமது கான் ரஹானி (28), எனும் ஆப்கன் வம்சாவளியை சேர்ந்த நபரை அமெரிக்க போலீசார் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications