நியூயார்க் நகரில் தடம் புரண்டது மெட்ரோ ரயில்- 4 பேர் பலி- 70 பேர் படுகாயம்
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மெட்ரோ ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர். 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
நியூயார்க் புறநகரில் நேற்று பிராங்க்ஸ் பகுதியில் உள்ள வளைவில் மெட்ரோ ரயில் திரும்பியபோது திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. அந்த ரயிலின் 8 பெட்டிகளில் 6 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு உருண்டன. ஒரு ரயில் பெட்டி, அப்பகுதியில் ஓடிக் கொண்டிருக்கும் ஹார்லம் நதிக்குள் விழுவது போன்று தொங்கியது.

இதைத் தொடர்ந்து தீயணைப்புப் படையினர் 100 பேர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்தோர் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தை தொடர்ந்து, அப்பகுதியில் தற்காலிகமாக ரயில் சேவைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த ஜூலை மாதம், இதே இடத்தில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications