சகாரா பாலைவனத்தை நடந்து கடக்க முற்பட்ட 35 பேர் தாகத்தால் பலியான சோகம்
அகடெஸ்: நைஜர் நாட்டைச் சேர்ந்த 35 பேர் சகாரா பலைவனத்தைக் கடந்து செல்ல முற்பட்ட போது, தண்ணீர் இன்றி தாகத்தால் வாடி பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
ஆப்பிரிக்காவிலுள்ள நைஜர் நாட்டில் நிலவும் வறுமை காரணமாக, பிழைப்புத் தேடி அப்பகுதி மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச் செல்ல முயன்று வருகின்றனர். சமீபத்தில் கூட ஐரோப்பிய நாடுகளுக்கு மத்திய தரைக்கடல் வழியாக படகில் பயணம் மேற்கொண்டவர்கள் நூற்றுக்கணக்கானோர் கடலில் மூழ்கி இறந்தனர்.
இந்நிலையில், சகாரா பாலைவனம் வழியாக கடக்க முற்பட்ட 35 பேர் தாகத்தால் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

வறுமை காரணமாக...
ஆப்பிரிக்காவிலுள்ள நைஜர் நாட்டின் அகடெஸ் நகரிலிருந்து வறுமை காரணமாக 60 பேர் ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபுக சஹாரா பாலைவனம் வழியாக இரு வாகனங்களில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

வாகனத்தில் கோளாறு...
சஹாரா பாலைவனத்தின் மையத்தில் அமைந்துள்ள அல்ஜீரியா நாட்டின் டாமன்ரசட் என்ற நகரை நோக்கி செல்ல அவர்கள் திட்டமிட்டுள்ளனர். ஆனால், எதிர்பாராத விதமாக அவர்கள் சென்ற வாகனத்தில் ஒன்றில் கோளாறு ஏற்பட்டுள்ளது.

கால்நடைப் பயணம்...
இதையடுத்து வாகனத்தில் பயணம் மேற்கொள்ள முடியாமல் பெண்கள், குழந்தைகள் என அவர்கள் கால் நடையாக பல்வேறு குழுக்களாக பிரிந்து பாலைவனத்தை கடக்க முயன்றுள்ளனர்.

தண்ணீர் தாகத்தில்....
பல நாட்கள் நூற்றுக்கணக்கான மைல் பாலைவனத்தில் நடந்த அவர்களது உடலில் தண்ணீர் வற்றிய நிலையில் தொண்டை வறண்டு போயுள்ளது. இதனால் உயிருக்கு போராடிய அவர்களில் 35 பேர் குடிக்க தண்ணீரின்றி பரிதாபமாகப் பலியாகியுள்ளனர்.

ராணுவத்தினர்...
உயிர் தப்பிய சிலர் மட்டும் எப்படியோ பல நாட்கள் நடந்து, சகாராவைக் கடந்து வழியில் இருந்த அர்லிட் நகரை அடைந்துள்ளனர். பின்னர், நடந்த சம்பவத்தை அவர்கள் அங்குள்ள ராணுவத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.

5 சடலங்கள்...
அதனைத் தொடர்ந்து ராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் இதுவரை 5 பேருடைய சடலம் மட்டும் மீட்கப் பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications