தெற்கு கரோலினா மாகாண ஆளுநர் தேர்தல் - இந்திய-அமெரிக்கர் நிக்கி ஹேலே 2வது முறையாக வெற்றி
வாஷிங்டன்: அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாண ஆளுநராக இந்திய அமெரிக்கர் நிக்கி ஹேலே இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
இத்தேர்தலில் முக்கிய வேட்பாளர்களாக குடியரசுக் கட்சியைச் சேர்த நிக்கி ஹேலே மற்றும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த வின்செண்ட் ஷெஹீன் ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இதில், இந்திய அமெரிக்க ஆளுநரான நிக்கி ஹேலே (42) முன்னணியில் உள்ளார். வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், ஆரம்ப கட்ட வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் நிக்கி வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இறுதி கட்ட தகவல் அடிப்படையில் 55 சதவீத வாக்குகளுடன் நிக்கி முன்னணியிலும், 41 சதவீத வாக்குகள் பெற்று ஷெஹீன் அவருக்கு அடுத்த இடத்திலும் உள்ளனர்.
நிக்கியின் பெற்றோர் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு குடி பெயர்ந்தவர்கள். நிக்கி வெற்றி பெற்று மீண்டும் 2வது முறை ஆளுநர் பதவியை ஏற்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தேர்தல் பிரசாரத்தின்போது, நிக்கிக்கு ஆதரவாக அக்கட்சியின் புளோரிடா மாகாண முன்னாள் ஆளுநர் ஜெப் புஷ், லூசியானா மற்றும் நியூ ஜெர்சி மாகாணங்களின் ஆளுநர்கள் முறையே பாபி ஜிண்டால் மற்றும் கிறிஸ் கிறிஸ்டீ உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications