நிபா வைரஸ்: கேரளாவில் இருந்து பழங்கள், காய்கறிகளை இறக்குமதி செய்ய அமீரகம் தடை
Recommended Video

அபுதாபி: கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதால் அங்கிருந்து பழங்கள், காய்கறிகளை இறக்குமதி செய்ய ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்துள்ளது.
கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருகிறது. வைரஸ் தாக்கி இதுவரை 2 நர்ஸுகள் உள்பட 14 பேர் உயிர் இழந்துள்ளனர். பலர் காய்ச்சலுடன் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கேரளாவில் இருந்து பழங்கள், காய்கறிகளை இறக்குமதி செய்ய ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கேரளாவில் இருந்து பழங்கள், காய்கறிகளை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுகிறது. துபாய், ஷார்ஜா, அஜ்மான், ராஸ் அல் கைமா, ஃபுஜைரா ஆகிய பகுதிகளில் உள்ள அதிகாரிகளுக்கு இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் நிபா வைரஸ் பரவியுள்ளது குறித்து உலக சுகாதார அமைப்பின் இணையதளத்தில் வெளியான தகவலை பார்த்த பிறகே இந்த தடை முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழந்தின்னி வவ்வால்கள் மூலம் தான் இந்த நிபா வைரஸ் பரவுகிறது. மாம்பழம், பேரீச்சம்பழம், வாழைப்பழம் ஆகியவை வவ்வால்களுக்கு பிடித்த உணவுகள் ஆகும்.












Click it and Unblock the Notifications