சாட்சிகளுக்கு நீரவ் மோடி கொலை மிரட்டல் விடுத்தார்.. லண்டன் கோர்ட்டில் இந்தியா பரபர வாதம்!
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் சாட்சிகளுக்கு நீரவ் மோடி கொலை மிரட்டல் விடுத்தார் என்று இந்திய தரப்பு லண்டன் நீதிமன்றத்தில் வாதம் செய்துள்ளது.
லண்டன்: பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் சாட்சிகளுக்கு நீரவ் மோடி கொலை மிரட்டல் விடுத்தார் என்று இந்திய தரப்பு லண்டன் நீதிமன்றத்தில் வாதம் செய்துள்ளது.
நீரவ் மோடிக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று நடந்த இந்த வழக்கில் காரசார விவாதம் நடந்தது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ12,700 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இவர் இதான் வழக்கு லண்டனில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

என்ன செய்தார்
இந்த வழக்கில் இந்தியா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் மிகவும் கடுமையான வாதங்களை வைத்தனர். அதில், நீரவ் மோடி இதுவரை வழக்கு விசாரணையில் ஒத்துழைக்கவில்லை. இந்தியாவில் இருந்து தப்பி வந்தவர்தான் அவர். அவருக்கு பெயில் வழங்க கூடாது. அவர் மீண்டும் எங்காவது தப்பி ஓடவே முயற்சி செய்வார்.

மிக மோசம்
ஏற்கனவே அவர் சில முறை ஆதாரங்களை அழித்து இருக்கிறார். தன்னுடைய ஆட்களை வைத்து ஆதாரங்களை அழித்துள்ளார். அதேபோல் அவரை வெளியேவிட்டால் அவர் ஆதாரங்களை அழிப்பதோடு சாட்சிகளை கொலை செய்யவும் வாய்ப்பு இருக்கிறது, ஏற்கனவே அவர் கொலை மிரட்டல் கூட விடுத்துள்ளார், என்று கூறினார்கள்.

செய்யவில்லை
ஆனால் நீரவ் மோடி தரப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. அதில், நீரவ் மோடி இந்தியாவில் இருந்து ஓடி வரவில்லை. அவர் அங்கு வழக்கு பதியும் முன்பே லண்டன் வந்துவிட்டார். லண்டனில் அவர் சுதந்திரமாகத்தான் இருந்தார். அவர் யாரையும் ஏமாற்றவில்லை.

இல்லை
லண்டன் வீதிகளில் அவர் வெளிப்படையாக உலா வந்தார். அவர் எங்கும் ஓடவில்லை என்று நீரவ் மோடி வழக்கறிஞர் குறிப்பிட்டார். ஆனால் நீதிபதிகள் இதை ஏற்கவில்லை. இதை ஏற்க மறுத்ததோடு நீதிபதிகள் நீரவ் மோடியின் ஜாமீனையும் மறுத்துவிட்டனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications