Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வைர வியாபாரி.. நீரவ் மோடியின் ஜாமீன் மனு நிராகரிப்பு! லண்டன் நீதிமன்றம் அதிரடி

Subscribe to Oneindia Tamil

லண்டன்: பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு தொடர்பாக தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த நீரவ் மோடி, இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டிருந்தார். ஜாமீன் கோரி அவர் விண்ணப்பித்திருந்த நிலையில், ஜாமீன் மறுக்கப்பட்டிருக்கிறது.

இது அவரது 10வது ஜாமீன் மனுவாகும். தனக்கு எதிராக கொலை முயற்சி நடப்பதாக அவர் புகார் கூறியிருந்த நிலையில், தற்போது அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு இருக்கிறது.

Nirav Modi UK Punjab National Bank

கடந்த 2018ம் ஆண்டு பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. மொத்தம் ரூ.13,000 இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், இதில் ரூ.6498.20 கோடி இவர் முறைகேடு செய்ததாகவும் குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டு வெளியாவதற்கு சில வாரங்களுக்கு முன்னரே நீரவ் மோடி லண்டனில் பதுங்கிவிட்டார். இதனையடுத்து அவர் மீது மத்திய அரசு குற்றசாட்டுகளை அடுக்கியது. தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இப்படி இருக்கையில், தன் மீது எந்த குற்றமும் இல்லை என்று கூறி, ஜாமீன் மனுத்தாக்கல் செய்திருந்தார். கடந்த 9 முறையும் மனுவை விசாரித்த லண்டன் உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. இந்த முறை சிபிஐ, நீரவுக்கு எதிராக கடுமையாக வாதாடியிருந்தது. இதனையடுத்து அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. ஜாமீன் கிடைத்தால் தப்பி செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்பதால் ஜாமீன் மறுக்கப்பட்டிருக்கிறது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், "இந்த வழக்கு கணிசமான மோசடி குற்றச்சாட்டை உள்ளடக்கியது" என்று கூறியுள்ளனர். மறுபுறம் நீரவ் மோடி தரப்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர் வாதிடுகையில், "இந்திய அரசு தரப்பிலிருந்து நீரவ் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. இருப்பினும் நீரவ் தப்பி ஓடமாட்டார். இந்தியா அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள சீக்கியர்களை குறி வைத்து சதி திட்டங்களை தீட்டி வருகிறது" என்று வாதிடப்பட்டது. இந்த வாதங்களை நீதிபதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த வழக்கில் கடந்த 2022ம் ஆண்டு நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் இதற்கான பணிகள் இன்னும் முழுமையடையவில்லை. அவர் இந்தியாவுக்கு வந்தால் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனையை பெறுவார் என்று சொல்லப்படுகிறது.

இந்தியாவில் நீரவ் மோடிக்கு எதிராக மூன்று வகையான குற்றவியல் நடவடிக்கைகள் உள்ளன. பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்ததாக சிபிஐ பதிந்த வழக்கு. இரண்டாவதாக அந்த மோசடியின் மூலம் வந்த பணத்தை சட்டத்திற்கு விரோதமாக பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை போட்ட வழக்கு, மூன்றாவதாக சிபிஐ விசாரணையில் சாட்சியங்களில் தலையீடு செய்ததாக என மூன்று வழக்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+