இயற்பியலுக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிப்பு.. மெஷின் லேர்னிங் குறித்த அபார சாதனைக்காக பரிசு!
ஸ்டாக்ஹோம்: இந்த ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு இருவருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஜான் ஜஜே. ஹாப்ஃபீல்ட் & கனடாவின் ஜாஃப்ரே ஹிண்டனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நேற்றைய தினம் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் ஆய்வாளர்களுக்கு நோபல் பரிசுகள் வழங்கப்படும். துறை ரீதியாக முக்கிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்வோருக்கு இந்த விருதுகள் வழங்கப்படும்.

நடப்பாண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயற்பியலுக்கான நோபல் பரிசு இப்போது இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஜஜே. ஹாப்ஃபீல்ட் & கனடாவை சேர்ந்த ஜாஃப்ரே ஹிண்டன் ஆகியோருக்கு இப்போது நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கை அறிவியல் தொழில்நுட்பம் மூலம் மிஷன் லேர்னிங் குறித்த கண்டுபிடிப்புக்கு இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசு பெறும் ஜே. ஹாப்ஃபீல்ட் இப்போது அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராக இருக்கிறார். அதேபோல ஹிண்டன் இப்போது கனடாவில் உள்ள டொரான்டோ பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராக இருக்கிறார்.












Click it and Unblock the Notifications