அமெரிக்காவின் தலையெழுத்து எங்கள் கையில்!... "கொழந்தசாமி"யின் சின்னப்புள்ளத்தன பேச்சு!!
அமெரிக்காவின் தலையெழுத்து எங்கள் கையில் உள்ளது என்று வடகொரிய நாட்டின் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பியாங்கியாங்: அமெரிக்காவின் தலையெழுத்து தங்கள் கையில் உள்ளதாக வடகொரிய நாட்டின் சார்பில் வெளியிடப்பட்டு மிஞ்சுசோஷன் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக பல்வேறு எதிர்ப்புகளை மீறி வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நிகழ்த்தி வருகிறது. இது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்து வந்த நிலையிலும் அதை பொருட்படுத்தாமல் வடகொரியா தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டும் அதிபர் கிம் ஜங் திருந்துவதாக தெரியவில்லை. மாறாக அமெரிக்காவுக்கு ஏட்டிக்கு போட்டியாகவே நடந்து வருகிறது.
இந்நிலையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் வடகொரியா செலுத்தி வருவதால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வடகொரியா மீது கடுங்கோபத்தில் உள்ளன.
வடகொரியாவுடன் பேச்சுவார்த்தைக்கு இது நேரமில்லை என்றும், ராணுவ நடவடிக்கைக்கு தயாராக இருப்பதாகவும் வெள்ளை மாளிகை தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வடகொரிய அமைச்சரவை சார்பில் வெளியிடப்படும் மிஞ்சு சோசன் பத்திரிகையில், அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுப்பது போன்ற ஒரு கருத்து வெளியிடப்பட்டுள்ளது. அதில் வடகொரியாவை மிரட்டும் அமெரிக்காவின் போக்கு தொடர்ந்து நீடிக்க முடியாது.
ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள அதிபர் டிரம்ப் காத்திருக்கும் உடனடி ஆபத்தை அறியாமல் இருக்கிறார். வடகொரியா குறித்த அறியாமையால் அதிபர் டிரம்ப் அமெரிக்காவை ஆபத்துக்குள்ளாக்கப்போ போகிறார். அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் தங்களை எதுவும் செய்துவிடமுடியாது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications