அமைச்சர் உள்பட 2 பேரை நிற்க வைத்து விமான எதிர்ப்பு துப்பாக்கியால் சுட்டுத் தள்ளிய "கிம்" படை!
பியாங்யாங்: வட கொரியாவில் சர்வாதிகாரி கிம் ஜாங் உன்னின் உத்தரவை மீறிய குற்றத்திற்காக அமைச்சர் உள்பட 2 பேரை விமானங்களை சுட்டுத் தள்ளக் கூடிய துப்பாக்கிகளை வைத்து கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளது வட கொரிய ராணுவம்.
"இம்" என்றால் சிறைவாசம்.. "கிம்"மை மீறினால் சொர்க்கவாசல் என்பதுதான் வட கொரியாவின் சர்வாதிகாரச் சட்டம். சர்வாதிகாரி கிம்முக்கு எதிராக ஒரு துறும்பு கூட அங்கு அசைய முடியாது. கொடூரமாக கொலை செய்து விடுவார்கள் கிம்மின் ராணுவப் படையினர். சொந்தக்காரர்களை கூட அவர் விட்டு வைத்ததில்லை. அந்த அளவுக்கு இரும்பு மனம் படைத்தவராக இருக்கிறார் கிம்.

இந்த நிலையில் கிம்மின் உத்தரவை செயல்படுத்தாத இரண்டு அரசு அதிகாரிகளை நிற்க வைத்து விமான எதிர்ப்பு துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். 32 வயதான கிம் கடந்த 2011ம் ஆண்டு தனது தந்தை கிம் ஜாங் இல் செத்துப் போன பிறகு பதவிக்கு வந்தார். அதன் பிறகு அவர் தலைமையில் நடந்த கொலைகள், தண்டனைகள் எண்ணிலடங்காதவை.
தற்போது கொல்லப்பட்டுள்ள இருவரில் ஒருவர் விவசாய அமைச்சர் ஹவாங் மின் என்றும், இன்னொருவர் கல்வித்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ரி யாங் ஜின் என்றும் தெரிய வந்துள்ளது.
கிம் தனது சொந்த தாய் மாமனையே கடந்த 2012ம் ஆண்டு தூக்கில் போட்ட துயரக்காரர் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications