கொரோனா இருக்குது.. குளிக்கவா போன.. டுமீல்.. சுட்டுக் கொன்ற வட கொரியா.. வெளியான பரபரப்பு தகவல்
பியோங்யாங்: வடகொரியாவில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகளை அந்த நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் செய்துவருகிறார். அது மிக மோசமான அளவுக்கு சென்று கொண்டிருப்பதாக அங்குள்ள ஊடகங்களில் வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.
Recommended Video
சீனாவிலிருந்து கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவியது அனைவரும் அறிந்ததுதான். எனவே சீனா உள்ளிட்ட வைரஸ் பாதித்த நாடுகளில் இருந்து தங்கள் நாட்டுக்கு வருவோரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறது வடகொரியா.
இப்படித்தான் ஒரு, அரசு வணிக அலுவலர் ஒருவரையும் தனிமைப்படுத்தி கண்காணித்துக் கொண்டு இருந்துள்ளது அந்த நாட்டு அரசு. ஆனால் அவர் முன்னறிவிப்பு இன்றி வெளியில், சென்றதாகவும், அங்கே பொதுமக்கள் கூட கூடிய இடத்தில் தண்ணீரில் குளித்ததாகவும் கூறப்படுகிறது.

ஊடக செய்தி
இதை அறிந்து அதிபரின் கவனத்திற்கு இந்த சம்பவம் கொண்டு செல்லப்பட்டதாகவும்., அதிகாரிகள் உடனே அவரை கைது செய்து சுட்டுக் கொன்று விட்டதாகவும் Dong-a Ilbo மற்றும் டெய்லி மெயில் ஆகிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வைரஸ் பாதிப்பை தடுப்பதற்கு ராணுவ கட்டுக்கோப்புடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று ஏற்கனவே கிம் ஜாங் உன் அறிவித்து உள்ளார். அதன் ஒரு பகுதியாக இது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பல முன்னுதாரணங்கள்
குழந்தை முகத்தில் இருக்கும் கிம் ஜாங் உன் இவ்வாறு கொடூரமான முடிவுகளை எடுப்பது இது ஒன்றும் புதிது கிடையாது. ஏற்கெனவே பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. 2014 ஆம் ஆண்டில் முன்னாள் துணை பொது பாதுகாப்பு அமைச்சர் ஓ சாங்-ஹான் கொல்லப்பட்டார். விமான எதிர்ப்பு துப்பாக்கிகளைப் பயன்படுத்தி கிம் ஜாங் உன் பல அதிகாரிகளை கொன்றுள்ளார் என்றும் தகவல்ல வெளியானது.

பிழைக்க வேண்டும்
ஆனால் வட கொரியாவில் அதிகாரிகள் தூக்கிலிடப்பட்டனர் அல்லது தண்டிக்கப்படுகிறார்கள் என்ற செய்திகள் வெளியாவதும், அதில் பல தவறான தகவல் என்பது பிறகு வெளிச்சத்துக்கு வருவதும், கடந்த காலங்களில் நடந்துள்ளது. எனவே, இப்போது வெளியான தகவலும் வதந்தியாக இருக்க வேண்டும் என வேண்டிக்கொண்டு இருக்கிறார்கள் அந்த நாட்டு மக்கள்.

தென் கொரியா வேற மாதிரி
வட கொரியா, நாட்டு எல்லைக்குள் கொரோனா வைரஸ் தொடர்பான எந்த பாதிப்பும் இதுவரை உறுதிப்படுத்தவில்லை, பியோங்யாங்கில் உள்ள உலக சுகாதார அமைப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் குறித்து தங்களுக்குத் தெரியாது என்று கூறுகின்றனர். இருப்பினும், சில தென் கொரிய ஊடகங்கள் கொரோனா வைரஸால், வட கொரியாவில் பலர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியிட்டுள்ளன.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications