கிம் உடல்நிலை எப்படி இருக்கிறது.. அமெரிக்கா சொல்வது இருக்கட்டும்.. தென் கொரிய ஊடகம் கூறுவது இதுதான்!
சியோல்: வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பதாக அமெரிக்காவின் முன்னணி ஊடகமான சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த நாட்டு உளவுத்துறை கூறிய தகவல் என்று மேற்கொண்டு அந்த செய்தி இதை சுட்டிக்காட்டியது.
Recommended Video
சர்வாதிகாரியாக அறியபடக்கூடிய கிம் உடல்நிலை பற்றி உலகில் உள்ள அத்தனை நாடுகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. அதிலும் முக்கியமாக அதன் எதிரி நாடான தென் கொரியா இந்த விஷயத்தில் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறது.
இதுபற்றி தென் கொரியாவின் உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அமெரிக்க ஊடகத்தின் செய்தி பற்றி உடனடியாக எதையும் உறுதிசெய்ய முடியவில்லை. தொடர்ந்து நாங்கள் முயற்சி செய்து வருகிறோம் என்று கூறினார்.

ஓரளவுக்கு சரி
இதனிடையே தென் கொரிய ஊடகம் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், சிஎன்என் வெளியிட்டுள்ள செய்தி முற்றிலும் சரியானது என்று கூறிவிட முடியாது என்று கூறியுள்ளது. கிங் உன் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது உண்மைதான் என்றபோதிலும், அமெரிக்கா கூறுவதை போல மிக மோசமான நிலையில் அவரது உடல்நிலை இல்லை என்று தென் கொரிய ஊடகம் தெரிவித்துள்ளது.

இதய அறுவை சிகிச்சை
கிம் ஜாங் உன் உடல்நிலை தேறி வருவதாகவும், அவர் ஒரு ரிசார்ட்டில் ஓய்வு எடுத்து வருவதாகவும் தென் கொரிய ஊடகம் 'டெய்லி என்கே' கூறியுள்ளது. கடந்த 12ஆம் தேதி கிம் ஜான் உன் இதய அறுவை சிகிச்சைக்கு உள்ளானதாகவும், அதன் பிறகு அவர் ஓய்வில் இருந்து வருவதாகவும் மற்றபடி உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது சரியல்ல என்றும் அந்த ஊடகம் தெரிவிக்கிறது.

பொது நிகழ்ச்சி
தென் கொரிய நாட்டு அரசு வட்டாரங்கள் கூறியதாவது: ஏப்ரல் 15ம்தேதி கிம் உன் தாத்தா மற்றும் அந்த நாட்டின் நிறுவன தந்தையின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் அதிபர் பங்கேற்கவில்லை என்பதைத் தொடர்ந்துதான் அவரது உடல்நிலை தொடர்பாக அனைத்து நாட்டு உளவு அமைப்புகளும் விசாரணையை ஆரம்பித்தன என்கிறார்.

இருவேறு தகவல்கள்
சியோலை தலைமையிடமாக கொண்ட வெப்சைட் டெய்லி என்.கே. சில உளவு அமைப்புகளை மேற்கோள் காட்டி, கிம் உன், வட கொரியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள ஹியாங்சனின் மவுண்ட் கும்காங் ரிசார்ட் கவுண்டியில் உள்ள ஒரு வில்லாவில் ஓய்வெடுத்து வருவதாக கூறுகிறது. ஆனால், கிம் "மோசமான உடல்நிலை பிரச்சினையில்" இருப்பதாக சி.என்.என் தெரிவித்துள்ளது. வட கொரியாவில் உளவு தகவல்கள் சேகரிப்பது கஷ்டம் என்பதால், இதில் எந்த தகவல் சரியானது என்பது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications