தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்.. வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் வடகொரியா
சியோல்: வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு வட கொரியநாட்டில் உணவு பஞ்சம் தலைவிரித்தாடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 37 வருடங்களில் இந்த வருடத்தில் தான் அதிக வறட்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிகாரப்பூர்வ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள கொரிய மத்திய செய்தி நிறுவனம், நாடு முழுவதும் இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில் சராசரியாக 54.4 மில்லி மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது. இது 1982-ம் ஆண்டுக்கு பிறகு பதிவாகியுள்ள குறைந்தபட்ச மழை அளவாகும். இதே காலத்தில் வட கொரியாவில் சராசரியாக 51.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மழையளவு மிகவும் குறைந்துவிட்டதால் வட கொரியாவைச் சேர்ந்த 10 மில்லியனுக்கும் அதிகமானோர் கடுமையான உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநா ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு நாளொன்றுக்கு ஒருவர் 300 கிராம் உணவை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்வதாகவும் ஐ.நா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மிக மோசமான அறுவடை காலமாக நடப்பாண்டு இருப்பதாக வடகொரிய அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் அவசர உணவுத்தேவையை எதிர் நோக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்துள்ள வடகொரிய அதிகாரிகள் சிலர், மோசமான வானிலை மற்றும் சர்வதேச பொருளாதாரத் தடைகளின் காரணமாகவே கடும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
சமீபத்திய ஆண்டுகளில் நாட்டில் நடத்தப்பட்ட தொடர் உயர்மட்ட அணுசக்தி மற்றும் ஏவுகணை சோதனைகளால் உணவு பஞ்சம் மேலும் கடுமையாகியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். இந்த வறட்சி மற்றும் உணவு பற்றாக்குறையானது மே மாதம் இறுதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் விவசாயத்தில் ஏற்பட்டுள்ள இழப்பை சரி செய்ய தீவிர முயற்சியில் வடகொரியா ஈடுபட்டுள்ளது அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் புதிய நீர் ஆதாரங்களை கண்டுபிடித்து விவசாயத்தை மீண்டும் மேம்படுத்தும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்
கடந்த 1990-ம் ஆண்டில் வட கொரியாவில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தினால் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தது நினைவுக்கூறத்தக்கது
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications