அன்பு மலர்களே!.. மீண்டும் ஒன்றாக சேரலாம்.. தென்கொரியாவிற்கு அழைப்பு விடுக்கும் வடகொரியா!
2018ல் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியாயாவும், தென்கொரியாயாவும் ஒரே கொடியின் கீழ் விளையாட இருக்கிறது.
பியாங்யாங்: கடந்த வாரம் கொரிய தீபகற்பத்தில் இருக்கும் 'அமைதி கிராமம்' என்ற இடத்தில் இரண்டு கொரியா நாட்டு முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்ட கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்று தெரியவில்லை.
ஆனால் இந்தக் கூட்டத்திற்கு பின் சில முக்கியமான விஷயங்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு நாடுகளும் வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஒரே கொடியின் கீழ் பங்கேற்க இருக்கிறது.
இதுதான் ஆச்சர்யமான விஷயம் என்றால் இரண்டு நாடுகளும் அரசியல் ரீதியாக ஒன்றாக இணையவும் நிறைய முன்னெடுப்புகள் செய்யப்பட இருக்கிறது. அணு ஆயுத சுவிட்சை தன் மேசை மீது வைத்து இருக்கும் வடகொரியா அதிபர் கிம் இப்படி எப்படி மாறினார் என்றுதான் உலகமே வியந்து பார்த்துக் கொண்டு இருக்கிறது.

பங்காளி சண்டை
50 வருடங்களுக்கு முன் கொரிய தீபகற்பத்தில் நடந்த சண்டைதான் இந்த இரண்டு நாடுகளையும் மொத்தமாக பிரித்து வைத்து இருந்தது. அப்போது இருந்து வடகொரியாவும், தென்கொரியாவும் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டது. முக்கியமாக கிம் வந்த பின் இந்த பிரச்சனை பெரிதானது.

அமெரிக்கா
இந்த பிரச்சனையில் அமெரிக்கா குளிர்காய தொடங்கியது. உலகில் பல நாடுகள் தென்கொரியாவிற்கு உறுதுணையாக இருந்தது. வடகொரியாவோ தனியாக தென்கொரிய கடல் பகுதியில் அணு குண்டு போட்டு விளையாடிக் கொண்டு இருந்தது. எப்போது இது உலகப்போராக மாறுமோ என்று எல்லா நாடுகளும் பயந்து கொண்டு இருந்தது.

ஒலிம்பிக்
தற்போது தென்கொரியாவில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் இரண்டு நாடுகளும் ஒரே கொடியின் கீழ் விளையாடும் என்று கூறப்பட்டு இருக்கிறது. இதற்காக 100க்கும் அதிகமான தங்கள் நாட்டு வீரர்களை ஏற்கனவே அந்த நாடு அனுப்பிவிட்டது. தற்போது அவர்கள் அங்கு பயிற்சி எடுத்து வருகிறார்கள்.

பிணைப்பு
போர் காரணமாக இரண்டு நாட்டிலும் தனித்து விடப்பட்ட குடும்பங்களும், உறவுகளும் இருக்கிறது. தற்போது இவர்கள் அனைவரும் மீண்டும் சந்திக்க இருக்கிறார்கள். தென்கொரிய அரசு இதற்கு ஏற்பாடு செய்துள்ளது. அவர்கள் சந்தித்து பேசும் உணர்ச்சிப்பூர்வமான நிகழ்வு அடுத்த வாரம் நடக்கும்.

சேரலாம்
இது மட்டும் இல்லாமல் தற்போது இரண்டு நாடுகளும் அரசியல் ரீதியா ஒன்றிணைய இருக்கிறது. இதற்கான முன்னெடுப்பை ஆச்சர்யமாக வடகொரியா செய்து இருக்கிறது. மீண்டும் வாருங்கள் சேரலாம் என்பது போல கூறியுள்ளது. முக்கியமான நமக்கு இடையில் இனி எந்த உலக நாடும் வரக்கூடாது, கொரிய தீபகற்பம் ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications