தாய்மையைப் போற்றும் நார்வே.. 140வது இடத்தில் "அன்னை" இந்தியா!
நியூயார்க்: தாய்மார்களுக்கு தேவையான அனைத்து வசதி மற்றும் பாதுகாப்புகளை கொண்ட நாடாக நார்வே தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா 140வது இடத்தில் உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ‘குழந்தைகளை பாதுகாப்போம்' என்ற தொண்டு நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில், பிரசவத்தின் போது ஏற்படும் தாய்-சேய் மரணம், தாய்மார்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு, பொருளாதார நிலை போன்ற காரணிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

முதலிடத்தில் நார்வே...
அதன்படி, தாய்மார்களுக்கு தேவையான அனைத்து வசதி மற்றும் பாதுகாப்புகளை தன்னகத்தே கொண்டு நார்வே முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் பின்லாந்து உள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கம்...
இந்த ஆய்வில், இதில் முதல் பத்து இடங்களில் ஐரோப்பிய நாடுகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. 9-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா மட்டும் தான் ஐரோப்பாவை சேராத ஒரே நாடு.

அமெரிக்கா....
பிரான்ஸ் 23-வது இடத்திலும், இங்கிலாந்து 24-வது இடத்திலும் உள்ளது. அமெரிக்கா இரண்டு இடங்கள் சரிந்து 33-வது இடத்தில் இருக்கிறது.

140வது இடத்தில் இந்தியா...
இப்பட்டியலில் ஜிம்பாப்வே, வங்காள தேசம் மற்றும் ஈராக் நாடுகளுக்கு கீழே 140-வது இடத்தில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடைசி இடத்தில் சோமாலியா...
வழக்கம் போல, இந்த ஆய்விலும் ஆப்பிரிக்க நாடுகளே மிக மோசமான நிலையில் உள்ளன. சோமாலியா கடைசி இடத்திலும் அதற்கு மேல் காங்கோ மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரசு ஆகியவை உள்ளன.

ஆய்வு முடிவின் படி...
முதல் பத்து இடத்தில் இருக்கும் நாடுகளில் 298 தாய்மார்களில் ஒரே ஒருவர் மட்டும் தான் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தையை இழக்கிறார். அதுவே கடைசி இடங்களில் இருக்கும் நாடுகளில் 8-ல் ஒருவர் தன்னுடைய குழந்தையை பறிகொடுக்கிறார் என ஆய்வு தெரிவிக்கின்றது.












Click it and Unblock the Notifications