இதயத்தில் அடித்த இந்தியா.. சிதைந்த பாகிஸ்தானின் நூர் கான் விமான தளத்தை கைப்பற்றிய அமெரிக்கா? பின்னணி

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுடனான மோதலில் நம் நாடு துல்லியமாக தாக்கி பாகிஸ்தானின் முக்கிய நூர்கான் விமானப்படை தளத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அதன்பிறகு தான் பாகிஸ்தான் நம்மிடம் மோதலை கைவிடுவதாக அறிவித்தது. இந்நிலையில் தான் தான் நம் நாட்டின் அதிரடி தாக்குதலில் உருக்குலைந்த நூர் கான் விமான தளத்தை அமெரிக்கா கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். 26 பேர் இறந்தனர். இதற்கு பதிலடியாக நம் நாடு ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடங்கியது.

pakistan us nur khan air base

கடந்த மே 7 ம் தேதி நள்ளிரவில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது. அதன்பிறகு மே 10ம் தேதி பாகிஸ்தானின் விமானப்படை, ராணுவதளங்கள் என்று 12 இடங்கள் ஏவுகணை தாக்குதல்கள் மூலம் அழிக்கப்பட்டது.

இதில் முக்கிய விமானப்படை தளம் என்பது நூர்கான் விமானதளமாகும். இந்த விமானதளம் என்பது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் ராவல்பிண்டியில் உள்ள சக்காலா பகுதியில் அமைந்துள்ளது. இது மிகவும் முக்கிய இடமாகும். இந்த விமான தளத்தின் அருகே தான் பாகிஸ்தானின் ராணுவ தலைமையகம் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி இங்கிருந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் 10 கிலோமீட்டர் தொலைவில் தான் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி பாகிஸ்தானின் அணுஆயுதங்களை மேற்பார்வையிடும் தலைமையகம் இதன் அருகே தான் உள்ளது. .

இதுதவிர இந்த விமான தளம் என்பது பாகிஸ்தானின் விமானப்படை பிரிவுகளான சி-130 ஹெர்குலஸ் மற்றும் நடுவானில் எரிபொருள் நிரப்பும் எல்-78விமானங்கள் இங்கிருந்து தான் செயல்படும். இதனால் தான் நம் நாடு இந்த விமானதளத்தை குறிவைத்து அதிரடி தாக்குதல் நடத்தியது.
இதுதவிர இந்த விமானதளம் என்பது கட்டுப்பாட்டு மையமாகவும், பெனாசிர் பூட்டோ சர்வதேச விமான நிலையம், பிஏஎஃப் கல்லூரி சக்லாலா மற்றும் ஃபஸாயா இன்டர் கல்லூரி நூர் கான் ஆகியவற்றையும் உள்ளடக்கியது. பிஏஎஃப் கல்லூரி சக்லாலா விமானப் பயிற்சி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறது, அதே நேரத்தில் ஃபஸாயா இன்டர் கல்லூரி நூர் கான் வளாகத்தில் கூடுதல் கல்வி வசதிகளை வழங்கி வருகிறது.

அதேபோல் போர் விமானங்களுக்கு வழிக்காட்டும் Saab 2000 விமானம் இங்கிருந்து தான் இயக்கத்தை தொடங்கும். இந்த விமானதளம் தான் பாகிஸ்தானின் போர் விமானங்களின் இயக்கத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்நிலையில் தான் நம் நாடு இந்த விமான தளத்தை குறிவைத்து துல்லியமாக தாக்கியது. இதில் சேதமடைந்துள்ள நூர்கான் விமானப்படை தளத்தை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. இதனை அந்த நாட்டின் டிபென்ஸ் எக்ஸ்பர்ட்டான இம்தியாஸ்குல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பேசிய வீடியோவில், ‛‛பாகிஸ்தானின் நூர்கான் விமானப்படைத் தளம் அமெரிக்க கட்டுப்பாட்டில் உள்ளது. பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுக்குக் கூட நுழைய அனுமதி இல்லை. பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுக்கு விமானப்படை தளத்தில் எந்த அதிகாரமும் இல்லை. அமெரிக்க விமானங்கள் விமானப்படை தளத்தில் காணப்படுகிறது. அதன் செயல்பாடு குறித்து வெளிப்படைத்தன்மை இல்லை'' என்றார். பாகிஸ்தானின் முக்கிய விமான தளமாக நூர்கான் விமான தளம் உள்ள நிலையில் அது அந்த நாட்டின் கட்டுப்பாட்டில் இல்லை. அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாக இம்தியாஸ் குல் பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளது. இது பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+