300 நோயாளிகளை கொலை செய்த 'நர்ஸ்'.. ஜெர்மனியை உலுக்கிய சீரியல் கொலைக்காரன்

Subscribe to Oneindia Tamil

ஒல்டன்பெர்க்: ஜெர்மனியில் நர்ஸ் ஒருவன் 300 நோயாளிகளை ஐந்து வருடங்களில் கொலை செய்துள்ள சம்பவம் அங்குள்ள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ஜெர்மனியில் டெல்மன்கார்ஸ்ட் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த 2000ம் ஆண்டு நீல்ஸ் ஹேகல் (42 வயது) நர்ஸாக பணியில் சேர்ந்தான். இவன் வேலைக்கு சேர்ந்த ஐந்து வருடங்களில் சுமார் 300 நோயாளிகளை தன் கைகளால் கொலை செய்து இருக்கிறான். இவர் கடந்த 2006ம் ஆண்டு 4 நோயாளிகளை கைது செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு தற்போது அதற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறான்.

Nurse ‘killed 300 patients in Germany

இந்நிலையில் நர்ஸ் நீல்ஸ் ஹேகல் 300 நோயாளிகள் வரை கொலை செய்திருப்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது. இத்தனை நோயாளிகள் வரை ஓகல் செய்வதை யாருமே தடுக்காமல் போனது ஏன்? என்று ஜெர்மனியில் கேள்வி எழுந்து வருகிறது.

அந்த அளவுக்கு பாதுகாப்பு குறைபாடு இருந்ததா என்றும், ஒருவரது இறப்பு குறித்து கூட கேள்வியும், சந்தேகமும் எழாததும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் குறிப்பிட்ட மருத்துவமனைக்கு புதிதாக வேலைக்கு வந்த நர்ஸ் ஒருவர் எழுதிய கடிதத்திற்கு பிறகே விஷயம் வெளியே தெரிந்துள்ளது.

இதனிடையே உலகையே உலுக்கிய சீரியல் கொலைக்காரன் ஹேகல் மீதான வழக்கு ஜெர்மனி நீதிமன்றத்தில் நடந்துவந்தது. தற்போது 100க்கும்மேற்பட்ட நோயாளிகளை கொன்றதாக ஓகல் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரும் ஜுன் மாதம் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+