ஈஸ்டர் பிரார்தனையை பாதியில் விட்டு ஒபாமாவை பார்க்க ஓடிய மக்கள்
வாஷிங்டன்: ஈஸ்டர் பண்டிகை சிறப்பு வழிபாட்டில் கலந்துகொள்ள தேவாலயம் சென்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன் கைகுலுக்க மக்கள் போட்டிபோட்டதால் சர்ச்சில் பிரார்தனை பாதிக்கப்பட்டது.

அமெரிக்காவில் ஈஸ்டர்
இயேசு உயிர்த்தெழுந்த தினமாக ஈஸ்டர் பண்டிகையை கிறிஸ்தவர்கள் சிறப்பாக கொண்டுகிறார்கள். நேற்று உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்களால் ஈஸ்டர் கொண்டாடப்பட்டது. அமெரிக்க தலைநகர் வாஷிங்டன்னிலுள்ள 19வது தெரு பாப்டிஸ்ட் சர்ச்சில் சிறப்பு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சர்ச்சுக்குபோன ஒபாமா குடும்பம்
இதி்ல் பங்கேற்க அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அவரது மனைவி மிச்செல், மற்றும் இரு மகள்களும் தேவாலயம் சென்றனர். அதிபரை பார்த்த மகிழ்ச்சியில் பிராத்தனையை அப்படியே பாதியில் விட்டுவிட்டு தேவாலயத்தின் உள்ளே இருந்த பொதுமக்கள் வெளியே ஓடிவந்தனர்.

ஸ்மைல் ப்ளீஸ்
ஒபாமாவிடம் கைகுலுக்கியபடி பிராத்தனைக்கு வந்த மக்கள் போட்டோக்களை எடுத்துக்கொண்டனர். மக்களின் அன்புத்தொல்லையை கடந்து ஒருவழியாக அதிபர் குடும்பம் தேவாலயத்திற்குள் வந்தது. இதன்பிறகுதான் மீண்டும் பிராத்தனை தொடங்கியது.

சமாளித்த போதகர்
பிரார்த்தனை பாதியில் நின்றதால், தேவாலயத்தின் போதகர் டெர்ரிக் ஹர்கின்சுக்கு தர்ம சங்கடமாகப்போய்விட்டது. அதே நேரம், அதிபர் ஒபாமாவை பார்க்க சென்ற மக்களையும் கண்டிக்க முடியாது என்பதால் சமாளித்துக்கொண்ட போதகர், "இந்த தேவாலயத்தில் இவ்வளவு கூட்டம் இருந்ததே எனக்கு இப்போதுதான் தெரிகிறது" என்று கூறி ஜோக் அடித்தார். இதன்பிறகு பிராத்தனையை போதகர்கள் தொடர்ந்தனர்.












Click it and Unblock the Notifications