6 ஆண்டுகளுக்கு பிறகு ட்விட்டரில் "சொந்த வீடு" கட்டிய அமெரிக்கா அதிபர் ஒபாமா!
வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் ஒபாமா 6 ஆண்டுகளுக்கு பிறகு ட்விட்டரில் கணக்கு துவங்கி உள்ளார். அவரை சுமார் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் ஃபாலோ செய்து வருகின்றனர்.
அமெரிக்க வெள்ளை மாளிகை நிர்வாகம் தகவல் தொடர்பிற்கு ட்விட்டரை பயன்படுத்தி வந்தது. ஆனால் அதிபர் ஒபாமா ட்விட்டரில் இணையாமல் தவிர்த்து வந்தார். இந்நிலையில்தான் அதிபர் ஒபாமா ட்விட்டர் கணக்கு துவங்கியுள்ளார்.
Hello, Twitter! It's Barack. Really! Six years in, they're finally giving me my own account.
— President Obama (@POTUS) May 18, 2015 ட்விட்டரில் அவர் இணைந்த ஒரு மணி நேரத்துக்குள் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் அவரை ஃபாலோ செய்தனர்... தற்போது சுமார் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் ஃபாலோ செய்து வருகின்றனர்..
ட்விட்டரின் புகைப்படமாக அமெரிக்காவின் அலபாமாவில் நடைபெற்ற செல்மா சிவில் உரிமைகள் பேரணியின் 50ஆம் ஆண்டு நிகழ்வில் கலந்துகொண்ட புகைப்படத்தை ஒபாமா வைத்துள்ளார். தன்னுடைய முதல் ட்வீட்டில் ஹலோ ட்விட்டர்! இது பாரக். உண்மையில், 6 ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் எனக்கு சொந்தமாக கணக்கு கொடுத்திருக்கிறார்கள் என்று நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.
தன்னைப் பற்றிக் குறிப்பிட வேண்டிய இடத்தில் அப்பா கணவன் மற்றும் அமெரிக்காவின் 44-வது அதிபர் என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அதிபர்கள் எச்.டபிள்யூ புஷ் மற்றும் பில் கிளிண்டன் போன்றோர் ட்விட்டரில் ஒபாமாவை பின் தொடர்ந்துள்ளனர். வருகிற அதிபர் தேர்தலில் போட்டியிட இருக்கும் ஹிலாரி கிளிண்டன் மட்டும் அவரை பின் தொடரவில்லை.












Click it and Unblock the Notifications