திரிபோலியில் 11 விமானங்கள் மாயம்: தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம் என அமெ. எச்சரிக்கை
திரிபோலி: லிபியாவின் திரிபோலி விமான நிலையத்தில் சமீபத்தில் 11 விமானங்கள் மாயமாகியுள்ளதாகவும், அவற்றை தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பயன்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆப்பிரிக்க நாடான லிபியாவில் கடந்த 34 ஆண்டுகளாக கடாபியின் சர்வாதிகார ஆட்சி நடந்து வந்தது. கடந்த 2011-ம் ஆண்டு உள்ளூர் போராட்டக்குழுக்களின் உதவியுடன் சர்வாதிகார ஆட்சியை ராணுவம் முடிவுக்கு கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து அங்கு தேசிய இடைக்கால பேரவை ஆட்சி நிறுவப்பட்டது. பின்னர் கடந்த ஜூன் மாதம் நாடாளுமன்றத்தேர்தல் நடந்தது. அதன்பிறகு அங்கு புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது.
இதற்கிடையே கடந்த மூன்றாண்டுகளாக லிபியாவின் தலைநகர் திரிபோலியில் உள்ள விமான நிலையம் ஜிண்டான் தீவிரவாதக் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்தது.
சண்டை...
இந்த விமானநிலையத்தைக் கைப்பற்றும் நோக்கில் மிஸ்ரதா இஸ்லாமிய போராட்டக் குழு கடந்த ஒரு மாத காலமாக ஜிண்டான் தீவிரவாதக் குழுவுடன் சண்டையிட்டு வருகிறது.
சொத்துக்கள் சேதம்...
இந்த சண்டையில் நூற்றுக்கணக்கானோர் பலியாயினர். விமான நிலையமும் ஒரு மாதத்துக்கு மேலாக மூடப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான விமான நிலைய சொத்துகளும் சேதம் அடைந்தன.
விமானங்கள் மாயம்...
அதனைத் தொடர்ந்து தற்போது இந்த விமான நிலையத்தின் கட்டுப்பாட்டினை மிஸ்ரதா இஸ்லாமிய தீவிரவாதக்குழு கைப்பற்றி விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கடந்த சில மாதங்களில் மட்டும் இந்த விமான நிலையத்திலிருந்த 11 பயணிகள் விமானங்களைக் காணவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது.
தாக்குதல் எச்சரிக்கை...
மாயமான அந்த விமானங்களைக் கொண்டு தீவிரவாதிகள், கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி அமெரிக்காவையே உலுக்கிய இரட்டை கோபுர தாக்குதலை போன்ற தாக்குதல்களுக்கு பயன்படுத்த திட்டமிட்டிருப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications