தலிபான்கள் தீவிரவாத இயக்கமா இல்லையா.. மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?.. ஒமர் அப்துல்லா கேள்வி
காபூல்: தலிபான்கள் தீவிரவாத இயக்கமா இல்லையா என்பது குறித்து மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சியின் துணை தலைவருமான ஒமர் அப்துல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் பிடியில் சிக்கியுள்ளது. விலைவாசி உயர்வு, தலிபான்கள் அச்சம் உள்ளிட்டவைகளால் அங்குள்ள மக்கள் அகதிகள் போல் அண்டைய நாடுகளில் தஞ்சமடைந்துள்ளார்கள்.

மேலும் சிலர் மீட்பு விமானங்களில் கூட்ட நெரிசலால் மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு அண்டைய நாடுகளுக்கு தஞ்சமடைய சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் கத்தார் நாட்டின் தோஹா நகரில் தலிபான்கள் அமைப்பின் துணைத் தலைவர் முகமது அப்பாஸ் ஸ்டேனக்சாய் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் கத்தார் நாட்டிற்கான இந்திய தூதர் தீபக் மித்தல் பேச்சுவார்த்தை நடத்தியதாக மத்திய வெளியுறவுத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையின்போது ஆப்கானிஸ் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது, அவர்கள் பத்திரமாக நாடு திரும்ப நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட விஷயங்களை இந்திய தூதர் வலியுறுத்தியதாகவும் அதற்கு தலிபான் உத்தரவாதம் அளித்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலிபான்களுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அந்த அமைப்பு தீவிரவாத அமைப்பா இல்லையா என்பது குறித்து மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என ஒமர் அப்துல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் தலிபான் அமைப்புடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. எனவே அந்த அமைப்பு தீவிரவாத இயக்கமா இல்லையா என்பது குறித்து மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டும். ஒரு வேளை அது தீவிரவாத இயக்கமாக இருந்தால் ஐநாவிடம் சொல்லி அந்த அமைப்பை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்க சொல்ல வேண்டும்.
இதன் மூலம் அவர்களது முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் மீண்டும் இயங்கும். நாமும் அவர்களை தீவிரவாத இயக்கமாக பார்க்க மாட்டோம். ஒரு வேளை தலிபான்கள் தீவிரவாத இயக்கம் என மத்திய அரசின் நிலைப்பாடாக இருந்தால் தலிபான்களுக்கும் மற்ற தீவிரவாத இயக்கத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன என்பதையும் கூற வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications