சுனாமி வதந்தியால் பீதி.. பிலிப்பைன்ஸில் நெரிசலில் சிக்கி பெண் பலி
மணிலா: பிலிப்பைன்ஸில் விடுக்கப்பட்ட தவறான சுனாமி எச்சரிக்கைத் தகவலால் பீதியடைந்த நூற்றுக்கணக்கானோர் பயந்து ஓடியபோது நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.
மணிலாவின் தெற்கில் உள்ள கான்டெலரியா என்ற ஊரில்தான் இந்த அசம்பாவிதம் நடந்து விட்டது. இந்த நகரில் சுனாமி தாக்கப் போவதாக தகவல்கள் பரவியது. இதனால் பீதியடைந்த நூற்றுக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர். அப்போது நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.
ஆனால் தாங்கள் சுனாமி எச்சரிக்கை எதையும் பிறப்பிக்கவில்லை என்று வட்டார இயற்கைப் பேரிடர் கவுன்சிலின் தலைவர் ஹென்றி பஸர் கூறியுள்ளார்.
நெரிசலில் சிக்கி உயிரிழந்தது 63 வயதான பெண் என்று தெரிகிறது. இவர் ஒரு மோட்டார் டிரை சைக்கிளில் சிக்கி மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
பிலிப்பைன்ஸில் மட்மோ புயலால் கன மழை பெய்து வருகிறது. பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில்தான் சிலர் சுனாமி வதந்தியை கிளப்பி விட்டு
விட்டனர்
பிலிப்பைன்ஸில் புயல்களும், நிலநடுக்கவும் மிகவும் சாதாரணமானது என்பது குறிப்பிடத்தக்கது. வருடத்திற்கு அங்கு குறைந்தது 20 புயல்கள் தாக்கும்.
சமீபத்தில்தா் ரம்மசன் என்ற புயல் பிலிப்பைன்ஸைத் தாக்கியது. இதில் 98 பேர் உயிரிழந்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications