ஜப்பான் கப்பலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு

Subscribe to Oneindia Tamil

டோக்கியோ: ஜப்பானின் டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் உள்ள இந்தியர்களில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு தெரியவந்துள்ளது. இக்கப்பலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்ஹாங்கில் இருந்து ஜப்பானுக்கு 3,711 பயணிகளுடன் டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பல் சென்றது. கொரோனா வைரஸ் தாக்குதலால் இக்கப்பல் ஜப்பான் துறைமுகத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

One more Indian tests positive for coronavirus on Japan ship

இக்கப்பலில் பயணித்தவர்களில் 138 பேர் இந்தியர்கள். இவர்களில் முதலில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது. இது படிப்படியாக அதிகரித்து 7 ஆக உயர்ந்தது.

இந்நிலையில் மேலும் ஒரு இந்தியருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து இக்கப்பலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்திருக்கிறது. 8 இந்தியர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அனைவரும் நலமுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த சொகுசு கப்பலில் சுமார் 600க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+