தெற்காசியாவில் ஒரேயொரு நாடு தீவிரவாதத்தை பரப்புகிறது... பாக். மீது மோடி மறைமுக தாக்கு
ஹாங்ஜூ: ஜி20 மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி தெற்காசியாவில் உள்ள ஒரேயொரு நாடு தீவிரவாதத்தை பரப்புவதாக பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
சீனாவில் நடந்த ஜி20 மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில்,தெற்காசியாவில் உள்ள ஒரேயொரு நாடு எங்கள் பகுதியில் தீவிரவாதிகளை பரப்புகிறது. இது குறித்து சர்வதேச சமூகம் கலந்தாலோசித்து ஒன்றுபட்டு செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரவாதத்திற்கு நிதியுதவி செய்து ஆதரவளிப்போரை கண்டுபிடித்து தனிமைப்படுத்த வேண்டும்.

சர்வதசே அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் குந்தகம் விளைவிக்கும் தீவிரவாதத்தை கடுமையாக கண்டிக்கிறோம். வளர்ந்து வரும் தீவிரவாதம் சவாலாக உள்ளது. இந்தியா தீவிரவாதத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. எங்களை பொறுத்தவரையில் தீவிரவாதி என்றால் தீவிரவாதி தான் என்றார்.

சீனாவில் இரண்டு நாட்கள் நடந்த ஜி20 மாநாட்டில் பேசிய அனைத்து தலைவர்களும் தீவிரவாதத்தை கடுமையாக கண்டித்ததுடன் அதை ஒடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications