ஈரானில் எங்க மக்களையும் காப்பாத்துங்க.. இந்தியாவிடம் மன்றாடிய இலங்கை - நேபாளம்.. மத்திய அரசு அதிரடி
டெஹ்ரான்: இஸ்ரேல் - ஈரான் போர் நடந்து வருகிறது. ஈரானில் தவிக்கும் மக்களை மத்திய அரசு ‛ஆபரேஷன் சிந்து' மூலம் பத்திரமாக மீட்டு வருகிறது. ஆனால் இலங்கை, நேபாளத்தை சேர்ந்தவர்களை அந்த நாட்டு அரசால் மீட்க முடியவில்லை. இதனால் தங்கள் நாட்டு மக்களையும் பத்திரமாக ஈரானில் இருந்து மீட்க இந்தியாவிடம் நேபாளம், இலங்கை நாடுகள் கூறியுள்ளன.
இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையேயான மோதல் போராக மாறியுள்ளது. இருநாடுகளும் மாறி மாறி தாக்கி வருகின்றனர். இதனால் இஸ்ரேல், ஈரான் நாட்டில் உள்ள சொந்த நாட்டு மக்களை ஒவ்வொரு நாடுகளும் அவசரஅவசரமாக வெளியேற்றின. இந்தியாவை சேர்ந்த மக்களும் ஈரானில் இருந்து வெளியேறி அண்டை நாடான அர்மேனியா வந்தனர்.

இதையடுத்து ‛ஆபரேஷன் சிந்து' நடவடிக்கை மூலம் அர்மேனியாவில் இருந்து இந்தியர்கள் விமானத்தில் மீட்கப்பட்டனர். அதன்பிறகு நேற்று ஈரான் நம் நாட்டுக்காக மூடிய தனது வான்வெளி பரப்பை திறந்தது.
இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக ஈரான் தனது வான்வெளியை மூடியது. இதனால் ஈரானில் இருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து ஈரானுக்குமான விமான சேவைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டதால் பலரும் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாமல் இருந்தனர். இதையடுத்து நம் நாட்டு மக்களை வெளியேற்றுவதற்கா ஈரான் தனது வான்வெளியை நேற்று திறந்தது. 1000 இந்தியர்கள் ஈரானில் இருந்து அடுத்தடுத்து விமானங்களில் டெல்லி வந்து இறங்கி வருகின்றனர்.
இன்னும் பல நாட்டு மக்கள் ஈரானில் தவித்து வருகின்றனர். போர் தீவிரமாகி உள்ளதால் அவர்களை மீட்பதில் பிரச்சனை உள்ளது. அந்த வகையில் இலங்கை, நேபாளத்தை சேர்ந்தவர்கள் ஈரானில் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் ஈரானில் தவித்து வரும் இலங்கை மற்றும் நேபாளை சேர்ந்தவர்களையும் இந்தியா மீட்டு வர முடிவு செய்துள்ளது.
ஈரானில் தவிக்கும் இலங்கை, நேபாளம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களை அவர்களால் மீட்க முடியவில்லை. இதனால் நம் நாட்டின் ‛ஆபரேஷன் சிந்து' நடவடிக்கை மூலம் மீட்க வேண்டும் என்று இலங்கை, நேபாளம் நாடுகள் நம் நாட்டுக்கு கோரிக்கை வைத்துள்ளன. இதனை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக ஈரானில் செயல்பட்டு வரும் இந்திய தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக‛‛ நேபாளம், இலங்கை நாடுகளை சேர்ந்த அரசின்கோரிக்கையை ஏற்று இந்திய தூதரகம் ஈரானில் இருந்து அந்த இருநாடுகளின் மக்களையும் பத்திரமாக மீட்கிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
நாளைக்கு விடியும்போது இருக்கு கச்சேரி? பெரிதாக திட்டம் போடும் டிரம்ப்.. வெள்ளை மாளிகை மர்ம வீடியோ -
அபுதாபியை குறிவைத்து ஈரான் அட்டாக்.. வீதிகளில் சிதறிய ஏவுகணை சிதைவுகள்! இந்தியர் பலி, பலர் காயம் -
ஈரானின் உச்ச தலைவராக.. என்னை பொறுப்பேற்க சொன்னார்கள்! நான்தான் வேண்டாம் என சொல்லிட்டேன் - டிரம்ப் -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம் -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு












Click it and Unblock the Notifications