89 ஆண்டுகளில் அமெரிக்காவில் நடந்த "ஷாக்கிங்" துப்பாக்கிச் சூடு இதுதான்!
ஆர்லான்டோ: 1927ம் ஆண்டுக்கு பிறகு 89 ஆண்டுகள் கழித்து தற்போது தான் அமெரிக்காவில் தனிநபர் ஒருவரால் பலர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஆர்லான்டோ நகரில் இருக்கும் பல்ஸ் என்ற ஓரினச்சேர்க்கையாளர்கள் கிளப்புக்குள் புகுந்த உமர் மாட்டீன் என்பவர் தான் வைத்திருந்த 2 துப்பாக்கிகளால் கண்மூடித்தனமாக சுட்டார்.
இதில் 50 பேர் பலியாகினார், 50 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மிஷிகன் கொலை
1927ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி மிஷிகன் மாநிலம் பாத் நகரில் ஆன்ட்ரூ கோஹோ என்பவர் தனது மனைவியை கொலை செய்துவிட்டு அப்பகுதியில் உள்ள துவக்கப் பள்ளிக்கு சென்று குண்டுகளை வீசினார். மேலும் அவர் தனது வாகனத்தில் இருந்த குண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தில் 38 குழந்தைகள் உள்பட 44 பேர் பலியாகினர்.

89 ஆண்டுகள்
அமெரிக்காவில் அவ்வப்போது யாராவது துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டு வருகின்றபோதிலும் 89 ஆண்டுகள் கழித்து தற்போது தான் தனிநபர் ஒருவரால் அதிகமானோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஓரினச்சேர்க்கை
உமர் குறித்து அவரது தந்தை மிர் சித்திக்கி கூறுகையில், ஒரு முறை மயாமியில் இரண்டு ஆண்கள் முத்தமிடுவதை பார்த்த என் மகனுக்கு கோபம் வந்தது. ஆனால் என் மகன் இப்படி ஒரு செயலை செய்வான் என எதிர்பார்க்கவே இல்லை. பிறரை போன்றே எனக்கும் இது அதிர்ச்சி அளித்துள்ளது என்றார்.

நம்ப முடியாது
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கும் மதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என மிர் சித்திக்கி தெரிவித்துள்ளார். ஆனால் சித்திக்கி ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான்களின் ஆதரவாளர் என்பதால் அவரது பேச்சை நம்ப முடியாது என வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications