ஈராக்கில் தற்கொலைப்படைத் தாக்குதல்… 80 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 80 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

ஈராக்கில் தொடர்ந்து வன்முறைகள் அரங்கேறி வரும் வேளையில் ஒரு காரில் வெடிகுண்டுகளை ஏற்றிக்கொண்டு வந்த தற்கொலை படை தீவிரவாதி அதனை வெடிக்கச் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 80 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேபோல் ஒரு உணவு விடுதியில் நிகழ்ந்த மற்றொரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் 35 பேர் கொல்லப்பட்டனர். 45 பேர் காயமடைந்தனர்.

Over 80 killed, more than 100 injured in Iraq blasts

சன்னி பிரிவினரின் எதிர்ப்பு போராட்டத்தில் பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த தாக்குதல்கள் ஷியா பிரிவினர் இடத்தில் நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இந்த தாக்குதல்களுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

பாக்தாதின் பிற இடங்களில் காவல்துறையினரை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும், பாதுகாப்பு படையினர் போல் உடையணிந்து வந்தும் தற்கொலைப் படை தாக்குதல்களை பயங்கரவாதிகள் அரங்கேற்றுவதாகவும் காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஈராக்கில் இந்த மாதத்தில் மட்டும் தாக்குதல் சம்பவங்களில், சுமார் 480 பேர் கொல்லப்பட்டிருப்பதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 5,200 பேர் வன்முறைச் சம்பவங்களுக்கு பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+