வாசிம் அக்ரம் மீது துப்பாக்கிச் சூடு நடந்த விவகாரம்... ஒருவர் கைது
கராச்சி: பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் வாசிம் அக்ரம் மீது நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
குவைதாபாத்தில் உள்ள தெளத் செளரங்கி பகுதியில் உள்ள வீட்டில் வைத்து இந்த நபரைப் போலீஸார் கைது செய்துள்ளனர் என்று கராச்சி கிழக்கு டிஐஜி முனீர் அகமது ஷேக் கூறியுள்ளார்.

சம்பவ நாளன்று நடந்த துப்பாக்கிச் சூட்டின்போது துப்பாக்கியால் சுட்ட நபர்கள் பயணித்த காரை இவர்தான் ஓட்டியுள்ளார் என்றும் முனீர் அகமது ஷேக் கூறினார்.
கராச்சியில் கடந்த புதன்கிழமையன்று தேசிய ஸ்டேடியத்தில் நடந்து வரும் இளம் வேகப் பந்து வீச்சாளர்களுக்கான பயிற்சி முகாமை மேற்பார்வையிடுவதற்காக வாசிம் அக்ரம் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கர்ஸாஸ் என்ற பகுதியில் அவருடைய கார் வந்தபோது, பின்னால் வந்த ஒரு கார், அக்ரம் காரில் மோதி விட்டது. இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே வார்த்தைப் போர் வெடித்தது. அப்போது அக்ரமை நோக்கி பின்னால் வந்த காரில் இருந்தவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் குண்டு அக்ரமின் கார் மீது பாய்ந்தது. அக்ரம் உயிர் தப்பினார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு கூட்டம் கூடி விட்டது. உடனடியாக அந்த மர்மக் காரில் வந்தவர்கள் அங்கிருந்து வேகமாக கிளம்பிப் போய் விட்டனர். இதையடுத்து போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில் கார் டிரைவர் சிக்கியுள்ளார். துப்பாக்கியால் சுட்ட நபரையும் அடையாளம் கண்டு விட்டதாகவும், அவரும் கைது செய்யப்படுவார் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் அக்ரம் மன ரீதியாக பாதிக்கப்பட்டாலும் கூட தொடர்ந்து அவர் இளம் வீரர்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications