உலகை உலுக்கிய பெஷாவர் பள்ளித் தாக்குதல் நாள்.... இன்றும் பாக்.-ல் 8 பேருக்கு தூக்கு!
பாகிஸ்தான்: உலகை உலுக்கிய பெஷாவர் பள்ளிகூடத் தாக்குதல் நாளை அனுசரித்த பாகிஸ்தான் இன்றும் வெவ்வேறு சிறைகளில் இருந்த 8 குற்றவாளிகளைத் தூக்கிலிட்டது.
பாகிஸ்தானில் பெஷாவரில் உள்ள ராணுவப் பள்ளியில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 150 பிஞ்சு குழந்தைகள் பரிதாபமாக பலி கொள்ளப்பட்டனர். இதனையடுத்து தீவிரவாதிகளை கடுமையாக ஒடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக அறிவித்த பாகிஸ்தான் அரசு அந்நாட்டில் தூக்குத் தண்டனைக்கு விதிக்கப்பட்ட தடையை தளர்த்தியது. அதாவது தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடையோருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவித்து அதிரடியாக நடைமுறைப்படுத்தவும் தொடங்கியது. இதுவரையில் மொத்தம் 310 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், தூக்குத் தண்டனையை கைவிட வேண்டும் என்று ஐ.நா. சபை, ஐரோப்பிய யூனியன், அம்னெஸ்டி அமைப்பு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு ஆணையம் ஆகியவை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் பாகிஸ்தான் அரசு அதன் கோரிக்கையை ஏற்கவில்லை. இந்நிலையில் இன்று பெஷாவர் பள்ளி கூட தாக்குதல் நாள் இன்று பாகிஸ்தானில் பல பகுதிகளில் அனுசரிக்கப்பட்டு அஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
அதேநேரத்தில் பஞ்சாப் மாகாணத்தில் வெவ்வேறு சிறைகளில் இருந்த 8 பேரை இன்று தூக்கிலிட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பெஷாவர் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் அரசு தீவிரவாத சம்பவங்களில் தொடர்புடைய கைதிகளுக்கு மட்டுமே மரணத் தண்டனை நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தது. தற்போது அதனை மீறி மிகப்பெரிய குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications