உலகை உலுக்கிய பெஷாவர் பள்ளித் தாக்குதல் நாள்.... இன்றும் பாக்.-ல் 8 பேருக்கு தூக்கு!
பாகிஸ்தான்: உலகை உலுக்கிய பெஷாவர் பள்ளிகூடத் தாக்குதல் நாளை அனுசரித்த பாகிஸ்தான் இன்றும் வெவ்வேறு சிறைகளில் இருந்த 8 குற்றவாளிகளைத் தூக்கிலிட்டது.
பாகிஸ்தானில் பெஷாவரில் உள்ள ராணுவப் பள்ளியில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 150 பிஞ்சு குழந்தைகள் பரிதாபமாக பலி கொள்ளப்பட்டனர். இதனையடுத்து தீவிரவாதிகளை கடுமையாக ஒடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக அறிவித்த பாகிஸ்தான் அரசு அந்நாட்டில் தூக்குத் தண்டனைக்கு விதிக்கப்பட்ட தடையை தளர்த்தியது. அதாவது தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடையோருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவித்து அதிரடியாக நடைமுறைப்படுத்தவும் தொடங்கியது. இதுவரையில் மொத்தம் 310 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், தூக்குத் தண்டனையை கைவிட வேண்டும் என்று ஐ.நா. சபை, ஐரோப்பிய யூனியன், அம்னெஸ்டி அமைப்பு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு ஆணையம் ஆகியவை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் பாகிஸ்தான் அரசு அதன் கோரிக்கையை ஏற்கவில்லை. இந்நிலையில் இன்று பெஷாவர் பள்ளி கூட தாக்குதல் நாள் இன்று பாகிஸ்தானில் பல பகுதிகளில் அனுசரிக்கப்பட்டு அஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
அதேநேரத்தில் பஞ்சாப் மாகாணத்தில் வெவ்வேறு சிறைகளில் இருந்த 8 பேரை இன்று தூக்கிலிட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பெஷாவர் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் அரசு தீவிரவாத சம்பவங்களில் தொடர்புடைய கைதிகளுக்கு மட்டுமே மரணத் தண்டனை நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தது. தற்போது அதனை மீறி மிகப்பெரிய குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications