உலகை உலுக்கிய பெஷாவர் பள்ளித் தாக்குதல் நாள்.... இன்றும் பாக்.-ல் 8 பேருக்கு தூக்கு!
பாகிஸ்தான்: உலகை உலுக்கிய பெஷாவர் பள்ளிகூடத் தாக்குதல் நாளை அனுசரித்த பாகிஸ்தான் இன்றும் வெவ்வேறு சிறைகளில் இருந்த 8 குற்றவாளிகளைத் தூக்கிலிட்டது.
பாகிஸ்தானில் பெஷாவரில் உள்ள ராணுவப் பள்ளியில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 150 பிஞ்சு குழந்தைகள் பரிதாபமாக பலி கொள்ளப்பட்டனர். இதனையடுத்து தீவிரவாதிகளை கடுமையாக ஒடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக அறிவித்த பாகிஸ்தான் அரசு அந்நாட்டில் தூக்குத் தண்டனைக்கு விதிக்கப்பட்ட தடையை தளர்த்தியது. அதாவது தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடையோருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவித்து அதிரடியாக நடைமுறைப்படுத்தவும் தொடங்கியது. இதுவரையில் மொத்தம் 310 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், தூக்குத் தண்டனையை கைவிட வேண்டும் என்று ஐ.நா. சபை, ஐரோப்பிய யூனியன், அம்னெஸ்டி அமைப்பு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு ஆணையம் ஆகியவை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் பாகிஸ்தான் அரசு அதன் கோரிக்கையை ஏற்கவில்லை. இந்நிலையில் இன்று பெஷாவர் பள்ளி கூட தாக்குதல் நாள் இன்று பாகிஸ்தானில் பல பகுதிகளில் அனுசரிக்கப்பட்டு அஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
அதேநேரத்தில் பஞ்சாப் மாகாணத்தில் வெவ்வேறு சிறைகளில் இருந்த 8 பேரை இன்று தூக்கிலிட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பெஷாவர் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் அரசு தீவிரவாத சம்பவங்களில் தொடர்புடைய கைதிகளுக்கு மட்டுமே மரணத் தண்டனை நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தது. தற்போது அதனை மீறி மிகப்பெரிய குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications