பாகிஸ்தானில் 15 வயது சிறுவனை கையை வெட்டத் தூண்டிய இமாம் கைது
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 15 வயது சிறுவன் தனது கையை வெட்டக் காரணமாக இருந்த இமாம் தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண தலைநகரான ஒகாராவைச் சேர்ந்தவர் ஷப்பிர் அகமது. அப்பகுதி பள்ளிவாசலில் இமாமாக உள்ளார். அவர் பள்ளிவாசலில் தொழுக வந்த ஆண்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார். அப்போது அவர் உங்களில் யார் தொழுவதை நிறுத்திவிட்டீர்கள் என்று கேட்டுள்ளார்.

அவர் கேட்ட கேள்வியை சரியாக கவனிக்காமல் 15 வயது சிறுவன் ஒருவர் கையை தூக்கினார். உடனே அங்கிருந்தவர்கள் எல்லாம் சிறுவனை பார்த்து கடவுளை அவமதித்துவிட்டாய் என்று கூறினார்கள்.
இந்நிலையில் இமாம் ஷப்பிர் அகமதோ சிறுவனை பார்த்து, நீ கடவுளை அவமதித்துவிட்டாய், நீ கொலை செய்யப்பட வேண்டியவன் என்றார். இதை எல்லாம் கேட்ட சிறுவன் வெட்கி தலை குனிந்தார்.
நேராக வீட்டிற்கு சென்ற சிறுவன் பாவ மன்னிப்பு தேட தவறாக தூக்கிய கையை வெட்டி ஒரு தட்டில் வைத்து பள்ளிவாசலுக்கு கொண்டு வந்து இமாமிடம் அளித்தார்.
சிறுவனின் செயலை உள்ளூர் மக்கள் பாராட்டினர். அவரின் பெற்றோருக்கோ சிறுவன் செய்த செயலால் ஒரே பெருமையாகிவிட்டது.
இந்நிலையில் ஒகாரா போலீசார் ஷப்பிர் அகமதை தீவிரவாத தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications