பாகிஸ்தானின் அணு ஆயுத அமைப்புடன் இம்ரான் கான் திடீர் ஆலோசனை
இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் போர் பதட்டம் உருவாகியுள்ள சூழ்நிலையில், அணு ஆயுத விவகாரங்களில் முடிவெடுக்கக்கூடிய அமைப்பின் நிர்வாகிகளுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் திடீர் ஆலோசனை நடத்தி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புல்வாமாவில் இந்திய சிஆர்பிஎப் படை வீரர்கள் மீது பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பினர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில், 40 பேர் பலியாகினர்.

இதையடுத்து நேற்று அதிகாலை, பாகிஸ்தான் வான் எல்லைக்குள் புகுந்து இந்திய போர் விமானங்கள் தீவிரவாதிகளின் முகாம்களை குண்டு வீசி அழித்துவிட்டு திரும்பியுள்ளன.
இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் இரு நாட்டு எல்லைப் பகுதியில் போர் விமானங்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடுமையான பதற்றமான சூழ்நிலை எழுந்துள்ள நிலையில் இம்ரான்கான் இன்று அந்த நாட்டின் அணுஆயுத விவகாரங்களுக்கான முடிவெடுக்கும் உயர் கமிட்டி உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த கூட்டத்தில் அணுஆயுத பயன்பாடு குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இருப்பினும் இந்திய தரப்பை அச்சுறுத்துவதற்காக இவ்வாறு ஒரு கூட்டத்தை கூட்டி இருக்கக்கூடும் என்று இந்திய பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
சர்வதேச சமூகத்தில் தனித்து விடப்பட்ட பாகிஸ்தான், இந்தியாவை எதிர்த்து போர் செய்வது என்பது இயலாத காரியம். இருப்பினும் இந்திய அரசை பீதிக்குள்ளாக்கும் நோக்கத்திலும், பாகிஸ்தான் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் நோக்கத்திலும் இவ்வாறு ஒரு கூட்டத்தைக் கூட்டி இருக்கலாம் என்கிறார்கள்.
அதேநேரம், அடிபட்ட வேகத்தில் இருக்கும் பாகிஸ்தான் வெறியோடு இருப்பதால், அதன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எளிதில் எடுத்துக்கொள்ள முடியாது என்றும் எச்சரிக்கிறார்கள்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications