இது எவ்வளவு கேவலம் தெரியுமா.. போலி நியூஸை உண்மை என்ற பாக். துணை பிரதமர்! அம்பலப்படுத்திய சொந்த ஊடகம்
இஸ்லாமாபாத்: இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலின் போது இந்தியா தாக்குதலைச் சமாளிக்க முடியாமலேயே பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யக் கோரிக்கை விடுத்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அதை மறைத்து பாகிஸ்தான் பொய்யான செய்திகளைப் பரப்பி வருகிறது. இதுபோல சமூக வலைத்தளங்களில் பரவும் பொய் செய்தியை நாடாளுமன்றத்திலேயே மேற்கோள் காட்டப்பட்ட நிகழ்வுகளும் நடந்துள்ளது.
கடந்த வாரம் இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலின் போது இந்தியா தாக்குதலைச் சமாளிக்க முடியவில்லை. பாகிஸ்தானில் பல இடங்களில் நாம் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் திணறிப் போனதே உண்மை. ஆனால், மோதல் நடந்து கொண்டிருந்த போதும் சரி, மோதல் முடிவுக்கு வந்த பிறகும் சரி பாகிஸ்தான் தொடர்ந்து பொய்யான தகவல்களையே பரப்பி வருகிறது.

பொய் செய்தி
ஆனால், அதைச் சர்வதேச ஊடகங்களும் இந்தியாவும் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது. இதற்கிடையே மீண்டும் அதேபோன்ற ஒரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய போது போலி செய்தியை மேற்கோள் காட்டி பேசினார். அதை அங்கிருந்த எம்பிக்கள் வரவேற்கவும் செய்தனர். அதாவது தனது நாட்டின் விமானப்படையை இங்கிலாந்தைச் சேர்ந்த தி டெய்லி டெலிகிராப் பாராட்டியிருப்பதாக இஷாக் டார் மேற்கோள் காட்டினார்,
பாகிஸ்தான் துணைப் பிரதமர்
தனது உரையில் இஷாக் டார், "இங்கிலாந்தில் வெளியாகும் டெலிகிராப் செய்தித்தாள் பாகிஸ்தான் விமானப்படையைப் பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் தான் வானில் கொடி கட்டி பறக்கும் ராஜா என்று குறிப்பிட்டுள்ளது" என்று ஷாக் டார் பேசியிருந்தார். அவரது இந்த பேச்சு இணையத்தில் டிரெண்டானது. இதையடுத்து பாகிஸ்தானைச் சேர்ந்த ஐவெரிஃபை என்ற உண்மை சரிபார்ப்பு குழு இதை பேக்ட் செக் செய்தது.
அதில் பாகிஸ்தான் துணைப் பிரதமர் பேசியது தவறான தகவல் என்பது தெரிய வந்தது. பிறகு பாகிஸ்தான் செய்தித்தாளான தி டான் உள்ளிட்ட செய்தி சேனல்களும் டார் மேற்கோள் காட்டியது பொய்யான செய்தி என்றும் சோஷியல் மீடியாவில் பரவும் செய்தியையே இஷாக் டார் பேசியிருப்பதாகக் குறிப்பிட்டது. மேலும், தி டெய்லி டெலிகிராஃப் தளத்திலும் இதுபோல ஏதேனும் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக என்பது சரிபார்க்கப்பட்டது. இருப்பினும், அதுபோல எந்தவொரு செய்தியையும் தி டெய்லி டெலிகிராஃப் வெளியிடவில்லை என்பது தெரிய வந்தது.
ஏகப்பட்ட பிழைகள்
கடந்த மே 10ம் தேதி முதல் இந்த போட்டோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வந்தது. இருப்பினும், அந்தப் படத்தில் எழுத்துப் பிழைகள், டைபோ பிழைகள், வாக்கிய முறைகளில் பிழை என ஏகப்பட்ட முரண்பாடுகள் இருந்தது. ஆனாலும் அந்த போலி செய்தி சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது. அதையே தான் அந்நாட்டின் துணைப் பிரதமரும் மேற்கோள் காட்டி பேசியிருக்கிறார்.
அம்பலப்படுத்திய சொந்த ஊடகம்
இதை பேக்ட் செக் செய்துள்ள பாக். நாட்டை சேர்ந்த தி டான் செய்தி நிறுவனமே இது போலியானது எனத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாக். செய்தியாளர் ஒருவர் தனது ட்விட்டரில், "பொய் செய்திகள் உண்மையை எவ்வாறு மறைக்கின்றன என்பதற்கு மற்றொரு உதாரணம்.. இன்று துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் டார், நாடாளுமன்றத்தில் தனது உரையின் போது, இந்தப் பொய்யான செய்தியை மேற்கோள் காட்டினார். அதை அவரே மேற்கொள் காட்டியிருக்கிறார்" என்று பகிர்ந்துள்ளார்,
பொதுவாக இப்போது எல்லா இடங்களிலும் போலி செய்தி பரவுகிறது. அது பெரிய பிரச்சினையாக மாறிவிட்டதை மறுப்பதற்கு இல்லை.. ஆனால், துணைப் பிரதமர் போல ஒரு உயர் பதவியில் இருப்பவரே போலி செய்தியை நாடாளுமன்றத்தில் மேற்கோள் காட்டுவதெல்லாம் வேறு எங்கும் நடக்காது.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை












Click it and Unblock the Notifications