பாகிஸ்தானில் தாலிபான் தற்கொலைப்படை தாக்குதலில் 8 பேர் பலி: 20 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் குவெட்டா நகரில் தாலிபான் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்
பலுசிஸ்தான் மாகாணத்தில் எல்லைப்புற பாதுகாப்பு படையினர் தங்களுடைய ரோந்து பணியை முடித்துவிட்டு வாகனங்களில் தலைநகர் குவெட்டாவுக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது தற்கொலை படை தீவிரவாதி ஒருவன் பாதுகாப்பு படை வாகனத்தை குறி வைத்து தாக்குதல் நடத்தினான்.

இதில் அந்த வழியாக வந்த வாகனங்கள் பலத்த சேதம் அடைந்தன. அந்த பகுதியில் இருந்த பொதுமக்களில் ஏராளமானோரும் தாக்குதலில் சிக்கிக்கொண்டனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 2 பேரும், பொதுமக்களில் 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications