Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொழுகை நடத்தாத குற்றத்திற்காக சிறுவன் கை துண்டிப்பு.. பாகிஸ்தான் மதகுரு கைது

Subscribe to Oneindia Tamil

லாகூர்: தொழுகை நடத்தவில்லை என்ற குற்றத்திற்காக, 15 வயது சிறுவனின் கரங்களை துண்டிக்க உத்தரவிட்ட மத குரு கைது செய்யப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் பரபரபப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் லாகூர் அருகே உள்ள குஜ்ரஷா முகீம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள மசூதியில் மதகுருவாக இருப்பவர் ஷபீர் அகமது.

நேற்று முன்தினம் மசூதியில் வழக்கமான தொழுகை நடந்தது. அப்போது யார் தொழுகையில் ஈடுபடவில்லை என மதகுரு கேட்டுள்ளார். அவரது கேள்வியை சரியாக புரிந்து கொள்ளாத முகமது அன்வர் என்கிற 15 வயது சிறுவன் கையை உயர்த்தியுள்ளான். ஆனால், தீரவிசாரிக்காமல், அன்வர், தெய்வ நிந்தனை செய்ததாக அறிவிக்கப்பட்டது.

அதற்கு தண்டனையாக சிறுவன் தனது கையை வெட்டி துண்டித்து தன்னிடம் காணிக்கையாக செலுத்த வேண்டும் என மதகுரு உத்தரவிட்டார். அவரது கட்டளையை ஏற்றுக் கொண்ட அச்சிறுவன் வீட்டிற்கு சென்றான். பின்னர் அரிவாளால் தனது ஒரு கையை துண்டாக வெட்டி அதை ஒரு தட்டில் வைத்து மதகுரு ஷபீர் அகமதுவிடம் எடுத்துச் சென்று வழங்கியுள்ளான்.

அந்த சிறுவன் இச்செயலை பெற்றோரும், அண்டை வீட்டினரும் தடுக்காமல், இறைவனுக்கு அடி பணிந்து இந்த செயலை சிறுவன் செய்துவிட்டதாக கொண்டாடியுள்ளனர்.

இதற்கிடையே இச்சம்பவம் போலீஸ் காதுகளுக்கு எட்டியது. சிறுவன் கையை துண்டிக்க தூண்டிய மதகுரு ஷபீர் அகமதுவை தீவிரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர். மதகுரு மீது சிறுவனின் குடும்பத்தினர் புகார் கொடுக்கவில்லை என்பதோடு, போலீசாருக்கு அவர்கள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+